உச்1சை1:ஶ்ரவஸமஶ்வானாம் வித்3தி4 மாமம்ருதோ1த்3ப4வம் |
ஐராவத1ம் க3ஜேன்த்3ராணாம் நராணாம் ச1 நராதி4ப1ம் ||27||
உச்சைஹ்ஶ்ரவஸம்--—உச்சைஶ்ரவன்; அஶ்வானாம்--—குதிரைகளில்; வித்தி—--அறிக; மாம்--—என்னை; அமிர்த---உத்பவம்—அமிர்த சமுத்திரத்தின் கலக்கத்திலிருந்து பிறந்த; ஐராவதம்--—ஐராவதம்; கஜ-இந்த்ராணாம்—அனைத்து பிரபு யானைகளில்; நராணாம்—--மனிதர்களிடையே; ச--—மற்றும்; நர---அதிபம்—-அரசன்
BG 10.27: குதிரைகளில் நான் அமிர்தக் கடலைக் கடைந்திலிருந்து பிறந்த உச்சைஶ்ரவன் என்று அறிவாய். வீறாப்பான யானைகளில் என்னை ஐராவதம் என்றும், மனிதர்களில் அரசன் என்றும் அறிவாய்.
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தனது மகிமைகளை வெளிப்படுத்த ஒவ்வொரு வகையிலும் மிக அற்புதமானவற்றை தொடர்ந்து பெயரிடுகிறார். உச்சைஶ்ரவா என்பது தேவலோக அரசனான இந்திரனுக்குச் சொந்தமான ஒருவெள்ளை நிற, தேவலோக சிறகுக் குதிரையாகும். இது பிரபஞ்சத்தின் வேகமான குதிரை. தேவர்கள் (தேவலோக கடவுள்கள்) மற்றும் அசுரர்கள் ஆகியோரால் அமிர்தப் பெருங்கடலைக் கடையும் பொழுது இது வெளிப்பட்டது. ஐராவதம் என்பது இந்திரனின் வாகனமாகச் செயல்படும் ஒரு வெள்ளை யானை. இது அர்த4-மாத1ங் அல்லது 'மேகங்களின் யானை' என்றும் அழைக்கப்படுகிறது.
உச்1சை1:ஶ்ரவஸமஶ்வானாம் வித்3தி4 மாமம்ருதோ1த்3ப4வம் |
ஐராவத1ம் க3ஜேன்த்3ராணாம் நராணாம் ச1 நராதி4ப1ம் ||27||
குதிரைகளில் நான் அமிர்தக் கடலைக் கடைந்திலிருந்து பிறந்த உச்சைஶ்ரவன் என்று அறிவாய். வீறாப்பான யானைகளில் என்னை ஐராவதம் என்றும், மனிதர்களில் அரசன் என்றும் அறிவாய்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!