லேலிஹ்யஸே க்3ரஸமான: ஸமன்தா1
ல்லோகா1ன்ஸமக்3ரான்வத3னைர்ஜ்வலத்பி4: |
தே1ஜோபி4ராபூ1ர்ய ஜக3த்1ஸமக்3ரம்
பா4ஸஸ்த1வோக்3ரா: ப்1ரத1ப1ன்தி1 விஷ்ணோ ||30||
லேலிஹ்யஸே--—நீங்கள் நக்குகிறீர்கள்; க்ரஸமானஹ---—விழுங்குகிறீர்கள்.; ஸமன்தாத்---—எல்லா பக்கங்களிலும்; லோகான்—--உலகங்கள்; ஸமக்ரான்----அனைத்தையும்; வதனைஹி--—வாய்களால்; ஜ்வலத்பிஹி---—எரியும்; தேஜோபிஹி----பிரகாசத்தால்; ஆபூர்ய—--நிறைந்து; ஜகத்--—ப்ரபஞ்சம்; ஸமக்ரம்---அனைத்தும்; பாஸஹ--—கதிர்களால்; தவ—--உங்கள்; உக்ராஹா--—கடுமையான; பிரதபந்தி—--எரிகின்றன; விஷ்ணோ----விஷ்ணுவே
BG 11.30: உங்களது நெருப்பு நாக்குகளால் எல்லாப் பக்கங்களிலும் வாழும் உயிரினங்களை நக்கி உங்களது எரியும் வாய்களால் விழுங்குகிறீர்கள். ஓ விஷ்ணுவே, உங்களது பிரகாசத்தின் உக்கிரமான, எங்கும் நிறைந்திருக்கும் கதிர்களால் முழு ப்ரபஞ்சத்தையும் நீங்கள் எரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
படைத்தல், பராமரித்தல், அழித்தல் ஆகிய மாபெரும் சக்திகளைக் கொண்டு இறைவன் உலகைக் கட்டுப்படுத்துகிறார். தற்சமயம், அர்ஜுனன் இந்த முறையில் அனைத்து பக்கங்களிலும் இருந்து அர்ஜுனனது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை மூழ்கடிக்கும் அனைத்தையும் விழுங்கும் சக்தியாக அவர் உணரப்படுகிறார். கடவுளின் ப்ரபஞ்ச வடிவத்தில் எதிர்கால நிகழ்வுகளின் தோற்றத்தைப் பார்க்கும் அர்ஜுனன், தனது எதிரிகள் வரவிருக்கும் போரில் அழிக்கப்படுவதைக் காண்கிறார். அவர் தனது கூட்டாளிகள் பலரை மரணத்தின் பிடியில் இருப்பதையும் காண்கிறார். தான் பார்க்கும் காட்சியைக் கண்டு பயந்துபோன அர்ஜுனன், அடுத்த வசனத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்றாடுகிறார்.
லேலிஹ்யஸே க்3ரஸமான: ஸமன்தா1
ல்லோகா1ன்ஸமக்3ரான்வத3னைர்ஜ்வலத்பி4: |
தே1ஜோபி4ராபூ1ர்ய ஜக3த்1ஸமக்3ரம்
பா4ஸஸ்த1வோக்3ரா: ப்1ரத1ப1ன்தி1 விஷ்ணோ ||30||
உங்களது நெருப்பு நாக்குகளால் எல்லாப் பக்கங்களிலும் வாழும் உயிரினங்களை நக்கி உங்களது எரியும் வாய்களால் விழுங்குகிறீர்கள். ஓ விஷ்ணுவே, உங்களது பிரகாசத்தின் உக்கிரமான, எங்கும் நிறைந்திருக்கும் கதிர்களால் …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!