అధ్యాయం 13: க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்

களம் மற்றும் களத்தை அறிந்தவரை வேறுபடுத்துவதன் மூலம் யோகம்

பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதை மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது ஒவ்வொரு பிரிவிலும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன முதல் பிரிவில் உள்ள ஆறு அத்தியாயங்கள் கர்ம யோகத்தை விவரிக்கிறது. ஆறு அத்தியாயங்களின் முதல் தொகுப்பு கர்ம யோகத்தை விவரிக்கிறது. இரண்டாவது தொகுப்பு பக்தியின் மகிமைகளை விவரிக்கிறது, மேலும் பக்தியின் ஊட்டத்திற்காக, அது கடவுளின் ஐஸ்வர்யத்தையும் விவரிக்கிறது. ஆறு அத்தியாயங்களின் மூன்றாவது தொகுப்பு 1த்1வ ஞானத்தை (அறிவு வேத விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்) விளக்குகிறது. தற்போதைய அத்தியாயம் மூன்றாவது பிரிவில் முதன்மையானது. இது இரண்டு சொற்களை அறிமுகப்படுத்துகிறது – க்ஷேத்1 ('களம்') மற்றும் க்ஷேத்1ரஜ்ஞ ('களத்தை அறிந்தவர்'). களத்தை உடலாகவும், களத்தை அறிபவரை உள்ளத்தில் வாழும் ஆன்மாவாகவும் நாம் நினைக்கலாம். ஆனால் இது ஒரு எளிமைப்படுத்தல்;. உண்மையில் களம் மிகவும் மிகவும் பரந்த அர்த்தமுடைய மனம் புத்தி அகங்காரம் மற்றும் நமது ஆளுமையை உள்ளடக்கிய அனைத்து பொருள் ஆற்றலின் பிற கூறுகளை அடங்கியதாகும். இந்த பரந்த அர்த்தத்தில், 'களத்தை அறிந்தவர்' ஆன ஆன்மாவைத் தவிர. உடலின் களம் நமது ஆளுமையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது,

ஒரு விவசாயி ஒரு வயலில் விதைகளை விதைத்து விளைந்ததை அறுவடை செய்வது போல, நாம் நம் உடலின் வயலை நல்ல அல்லது கெட்ட எண்ணங்கள் மற்றும் செயல்களால் விதைத்து, அதன் விளைவாக வரும் விதியை அறுவடை செய்கிறோம். புத்தர் விளக்கியிருந்தார்: ‘ நாம் அனைத்தும் நமது நினைத்ததன் விளைவுதான்; அது நம் எண்ணங்களின் அடிப்படையில் அமைந்தது; அது நம் எண்ணங்களால் ஆனது.' அதனால் தான் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாக மாறுகிறோம். சிறந்த அமெரிக்க சிந்தனையாளர் ரால்ப் வால்டோ எமர்சன் கூறினார் – ‘எல்லா செயல்களுக்கும் சிந்தனையே தந்தை.’ எனவே, நல்ல மற்றும் சரியான எண்ணங்கள் மற்றும் செயல்களால் நம் உடலை வளர்க்கும் முறையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு உடம்புக்கும் உடம்பை அறிபவனுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது அவசியம். இதற்கு களத்திற்கும் களம் அறிந்தவருக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றிய அறிவு தேவை. தற்போதைய அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வேறுபாட்டைப் பற்றிய விரிவான ஆய்வுக்குச் செல்கிறார். உடலின் களத்தை உருவாக்கும் ஜட இயற்கையின் கூறுகளை அவர் கணக்கிடுகிறார். அவர் களத்தில் எழும் மாற்றங்களை, உணர்ச்சிகள், உணர்வுகள் மற்றும் உணர்வுகளின் வடிவத்தில் விவரிக்கிறார். வயலைச் தூய்மைப்படுத்தி அறிவின் ஒளியால் ஒளிரச் செய்யும் நற்பண்புகளையும் குணங்களையும் குறிப்பிடுகிறார். அத்தகைய அறிவு, களத்தை அறிந்த ஆன்மாவை உணர உதவுகிறது. அத்தியாயம் பின்னர் அனைத்து உயிரினங்களின் புலங்களையும் அறிந்த கடவுளை விவரிக்கிறது. அந்த பரமாத்மாவானவர் முரண்பாடான பண்புகளை உடையவர், அதாவது, ஒரே நேரத்தில் எதிர் குணங்களைக் கொண்டவர், எனவே அவர் அனைத்து உயிர்களின் ஒப்புயர்வற்ற ஆன்மா. ஆன்மா, பரமாத்மா மற்றும் பொருள் ஆற்றல் ஆகியவற்றை விவரித்த பிறகு, உயிர்கள் செய்யும் செயல்களுக்குப் பின்வருவனவற்றில் எது பொறுப்பு என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் விளக்குகிறார். முழு உலகிலும் அவற்றின் காரணத்திற்கும் விளைவுக்கும் யார் மிகவும் பொறுப்பு? எவர்கள் தங்கள் வேற்றுமையை உணர்ந்து, செயலின் காரணத்தை நன்கு அறிந்தவர்கள் உண்மையில் பார்க்கிறார்கள், அவர்கள் மட்டுமே தெய்வீக அறிவில் நிலைபெறுகிறார்கள். அவர்கள் எல்லா உயிர்களிலும் பரமாத்மாவைக் காண்கிறார்கள், எனவே அவர்கள் தன்னை விட யாரையும் தாழ்ந்தவராக கருதுவதில்லை. அவர்களால் ஒரே இயற்கை சக்தியில் அமைந்துள்ள பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்களை காணமுடிகிறது மேலும் அனைத்து உயிரினங்களிலும் பொதுவான ஆன்மீக அடிப்படையை காணும்பொழுது அவர்கள் ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறார்கள்.

భగవద్గీత 13.1 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனன் கூறினார், 'ஓ கேசவ், ப்ரகிரிதி மற்றும் புருஷ் என்றால் என்ன, க்ஷேதி1ரம் மற்றும் க்ஷேத்1ரஜ்ஞ என்றால் என்ன என்பதை நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்? உண்மையான அறிவு என்ன? இந்த அறிவின் குறிக்கோள் என்ன என்பதை அறியவும் விரும்புகிறேன்.

భగవద్గీత 13.2 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒப்புயர்வற்ற தெய்வீக இறைவன் கூறினார்: ஓ அர்ஜுனா, இந்த உடல் க்ஷேத்ர (செயல்பாடுகளின் களம்) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த உடலை அறிந்தவர் க்ஷேத்ரஞ்ஞ (களத்தை அறிந்தவர்) என்று இரண்டையும் பற்றிய உண்மையைக் கண்டறியும் முனிவர்களால் அழைக்கப்படுகிறார்.

భగవద్గీత 13.3 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ, பரத குலத்தில் தோன்றியவனே, நான் தனிப்பட்ட செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்தவன். உடலைச் செயல்களின் களமாகவும், ஆன்மாவும் கடவுளும் களத்தை அறிந்தவர்களாகவும் புரிந்துகொள்வதை நான் உண்மையான அறிவாகக் கருதுகிறேன்.

భగవద్గీత 13.4 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

கேட்பாய், அந்த களம் என்ன, அதன் தன்மை என்ன என்பதை நான் உனக்கு விளக்குகிறேன். அதற்குள் எப்படி மாற்றம் நிகழ்கிறது, அது எதனால் உருவாக்கப்பட்டது, செயல் களத்தை அறிந்தவர் யார், அவருடைய மகிமைகள் என்ன என்பதையும் விளக்குகிறேன்.

భగవద్గీత 13.5 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

சிறந்த முனிவர்கள் களம் பற்றிய உண்மையையும் களத்தை அறிந்தவர்களையும் பலவாறு பாடியுள்ளனர். இது பல்வேறு வேத பாடல்களில் கூறப்பட்டுள்ளது, இது பல்வேறு வேத ஆதாரங்களிலும், குறிப்பாக ப்ரஹ்மஸூத்திரங்களிலும் உறுதியான பகுத்தறிவு மற்றும் முடிவான ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது..

భగవద్గీత 13.6 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

செயல்பாடுகளின் புலம் ஐந்து பெரிய கூறுகளால் ஆனது, அகங்காரம், புத்தி, வெளிப்படுத்தப்படாத ஆதி பொருள், பதினொரு புலன்கள் (ஐந்து அறிவு புலன்கள், ஐந்து வேலை புலன்கள் மற்றும் மனம்) மற்றும் புலன்களின் ஐந்து பொருள்கள்.

భగవద్గీత 13.7 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆசை மற்றும் வெறுப்பு, மகிழ்ச்சி மற்றும் துன்பம், உடல், உணர்வு மற்றும் விருப்பம்--இவை அனைத்தும் களத்தையும் அதன் மாற்றங்களையும் உள்ளடக்கியது.

భగవద్గీత 13.8 - 13.12 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பணிவு; பாசாங்குத்தனத்திலிருந்து விடுதலை; அகிம்சை; மன்னிப்பு; எளிமை; குருவிற்கு சேவை; உடல் மற்றும் மனத்தின் தூய்மை; உறுதியான தன்மை; சுய கட்டுப்பாடு; உணர்வுகளின் பொருள்களை நோக்கிய அக்கறையின்மை; அகங்காரம் இல்லாதது; பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகிய தீமைகளை நினைவு கூறுவது; பற்றுதலில் இருந்து விடுதலை; வாழ்க்கைத் துணை, குழந்தைகள், வீடு மற்றும் பலவற்றுடன் பற்றுதல் கொள்ளாதது; வாழ்க்கையில் விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு மத்தியில் சமமான எண்ணம்; என் மீது நிலையான மற்றும் பிரத்தியேக பக்தி; தனிமையான இடங்களை விரும்புவது மற்றும் உலக சமூகத்தின் மீதான வெறுப்பு; ஆன்மீக அறிவில் நிலைத்தன்மை; மற்றும் முழுமையான உண்மையின் தத்துவ நாட்டம் - இவை அனைத்தையும் நான் அறிவு என்று அறிவிக்கிறேன், அதற்கு முரணானதை நான் அறியாமை என்று அழைக்கிறேன்.

భగవద్గీత 13.13 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அறியப்பட வேண்டியதை நான் இப்பொழுது உனக்கு வெளிப்படுத்துகிறேன், மேலும் இதை அறிவதன் மூலம் ஒருவர் அழியாத நிலையை அடைகிறார். இது இருப்புக்கும் இல்லாததற்கும் அப்பாற்பட்ட ஆரம்பமற்ற ப்ரஹ்மம் .

భగవద్గీత 13.14 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எல்லா இடங்களிலும் அவருடைய கைகள் மற்றும் கால்கள், கண்கள், தலைகள் மற்றும் முகங்கள் உள்ளன. அவருடைய காதுகள் எல்லா இடங்களிலும் உள்ளன, ஏனென்றால் அவர் ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் வியாபித்திருக்கிறார்.

భగవద్గీత 13.15 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அவர் அனைத்து புலன் பொருள்களையும் உணர்ந்தாலும், அவர் புலன்கள் இல்லாதவர். அவர் எதனுடனும் பற்றற்றவர், ஆயினும் அவர் அனைத்தையும் பராமரிப்பவர். அவர் குணாதிசயங்கள் இல்லாதவராக இருந்தாலும், ஜட இயற்கையின் மூன்று முறைகளை அனுபவிப்பவராக இருக்கிறார்.

భగవద్గీత 13.16 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அசையும் மற்றும் அசையாத அனைத்து உயிரினங்களுக்கும் வெளியேயும் உள்ளேயும் அவர் இருக்கிறார். அவர் நுட்பமானவர், எனவே, அவர் புரிந்துகொள்ள முடியாதவர். அவர் வெகு தொலைவில் இருக்கிறார், ஆனால் அவர் மிக அருகிலும் இருக்கிறார்.

భగవద్గీత 13.17 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அவர் பிரிக்க முடியாதவர், ஆனாலும் அவர் உயிரினங்களுக்கிடையில் பிரிந்துள்ளதாகத் தோன்றுகிறார். ஒப்புயர்வற்ற ஆளுமையை அனைத்து உயிரினங்களின் படைப்பாளர், பராமரிப்பாளர் மற்றும் நிர்மூலமாக்குபவர் என்று அறிந்து கொள்ளுங்கள்.

భగవద్గీత 13.18 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அவர் எல்லா ஒளிகளிலும் ஒளியின் ஆதாரமாக இருக்கிறார் மற்றும் அறியாமை இருளுக்கு அப்பாற்பட்டவர். அவர் அறிவு, அறிவின் பொருள் மற்றும் அறிவின் குறிக்கோள். அவர் எல்லா உயிர்களின் இதயங்களிலும் வாழ்கிறார்.

భగవద్గీత 13.19 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

களத்தின் தன்மையையும், அறிவு என்பதன் விளக்கம், மற்றும் அறிவின் பொருளையும், இவ்வாறு நான் உங்களுக்கு வெளிப்படுத்தினேன். என் பக்தர்கள் மட்டுமே இதை உண்மையில் புரிந்து கொள்ள முடியும், அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் என் தெய்வீக தன்மையை அடைகிறார்கள்.

భగవద్గీత 13.20 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ப்ரகி1ரிதி1 மற்றும் புருஷம் (தனிப்பட்ட ஆத்மாக்கள்) இரண்டும் நித்தியமானவை. உடலில் நிகழும் அனைத்து மாற்றங்களும் இயற்கையின் மூன்று குணங்களும் பொருள் ஆற்றலில் இருந்து உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

భగవద్గీత 13.21 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

படைப்பு விஷயத்தில், ப்ரகிருதி சக்தி காரணம் மற்றும் விளைவுகளுக்கு பொறுப்பாகும், மேலும் ஆன்மா இன்பம் மற்றும் துக்கத்தின் அனுபவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

భగవద్గీత 13.22 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ப்ரகி1ரிதி1யில் (பொருள் ஆற்றல்) அமர்ந்திருக்கும் புருஷ் (தனி ஆன்மா) மூன்று குணங்களை அனுபவிக்க விரும்பும்பொழுது, ​​அவற்றின் மீதான பற்றுதலே உயர்ந்த மற்றும் தாழ்ந்த கருப்பையில் பிறப்பதற்கு காரணமாகிறது.

భగవద్గీత 13.23 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உடலுக்குள்ளும் பரமாத்மா வசிக்கிறார். அவர் சாட்சி, அனுமதியளிப்பவர், ஆதரவாளர், ஆழ்நிலை அனுபவிப்பவர், இறுதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் பரமாத்மா (உச்ச ஆத்மா) என்று கூறப்படுகிறது.

భగవద్గీత 13.24 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பரமாத்மா, ஜீவாத்மா, ப்ரகி1ரிதி1 ஆகியவற்றின் உண்மையையும், மூன்று குணங்களின் தொடர்புகளையும் புரிந்து கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. அவர்களின் தற்போதைய நிலை எதுவாக இருந்தாலும், அவர்கள் சுதந்திரமாகி விடுகிறார்கள்.

భగవద్గీత 13.25 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

சிலர் தியானத்தின் மூலம் பரமாத்மாவை தங்கள் இதயங்களில் உணர முயற்சிக்கிறார்கள், மற்றவர்கள் அறிவை வளர்ப்பதன் மூலம் அதைச் செய்ய முயற்சிக்கிறார்கள், இன்னும் சிலர் அந்த உணர்வை செயல்பாட்டின் மூலம் அடைய முயற்சிக்கின்றனர்.

భగవద్గీత 13.26 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இன்னும் சிலர் இந்த ஆன்மிகப் பாதைகளைப் பற்றி அறியாதவர்கள், ஆனால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து கேட்டு, ஒப்புயர்வற்ற கடவுளை வணங்கத் தொடங்குகிறார்கள். துறவிகளிடமிருந்து கேட்கும் பக்தியின் மூலம், அவர்களும் பிறப்பு மற்றும் இறப்பு என்ற பெருங்கடலைப் படிப்படியாகக் கடக்க முடியும்.

భగవద్గీత 13.27 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ பரதர்களில் சிறந்தவனே, நீ காணும் அசையும் மற்றும் அசையாதது எதுவாக இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளின் களம் மற்றும் களத்தை அறிந்தவரின் கலவையாக இருப்பதை அறிந்து கொள்.

భగవద్గీత 13.28 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எல்லா உயிர்களிலும் ஆன்மாவுடன் பரமாத்மாவை (உயர்ந்த ஆன்மாவை) உணர்ந்து, இந்த அழிந்துபோகும் உடலில் ஆத்மா மற்றும் பரமாத்மா இரண்டும் அழிவற்றது என்று புரிந்துகொள்பவர்கள் மட்டுமே உண்மையாகப் பார்க்கிறார்கள்

భగవద్గీత 13.29 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எங்கும் எல்லா உயிர்களிலும் சமமாக இருக்கும் பரமாத்மாவாக கடவுளைப் பார்ப்பவர்கள், தங்கள் மனத்தால் தங்களைத் தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள். அதன் மூலம், அவர்கள் உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.

భగవద్గీత 13.30 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அனைத்து செயல்களும் (உடலின்) ஜட இயற்கையால் செய்யப்படுகின்றன. அதே சமயம் உடலுற்ற ஆத்மா உண்மையில் எதையும் செய்வதில்லை என்பதை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையில் பார்க்கிறார்கள்.

భగవద్గీత 13.31 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒரே ஜட இயல்பில் உள்ள பலதரப்பட்ட ஜீவராசிகளைக் கண்டு, அவையனைத்தும் அதிலிருந்து பிறப்பதாகப் புரிந்து கொள்ளும்பொழுது, ​​அவர்கள் ப்ரஹ்மத்தை உணர்ந்து கொள்கிறார்கள்.

భగవద్గీత 13.32 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

குந்தியின் மகனே, உன்னத ஆன்மா அழியாதது, ஆரம்பம் இல்லாதது, மற்றும் எந்த ஜட குணங்களும் அற்றது. உடலுக்குள் அமைந்திருந்தாலும், அது செயல்படவும் இல்லை, பொருள் ஆற்றலால் கறைபடவும் இல்லை.

భగవద్గీత 13.33 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

விண்வெளி எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருக்கிறது, ஆனால் நுட்பமாக இருப்பதால், அவ்வாறு வைத்திருப்பதனால் மாசுபடுவதில்லை. அதுபோலவே, ஆத்மா முழு உடலிலும் உணர்வின் வடிவில் வியாபித்திருந்தாலும், உடலின் பண்புகளால் ஆன்மா பாதிக்கப்படுவதில்லை.

భగవద్గీత 13.34 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒரு சூரியன் பிரபஞ்சம் முழுவதையும் ஒளிரச் செய்வது போல, ஆத்மா முழு உடலையும் உணர்வின் சக்தியால் ஒளிரச் செய்கிறது.

భగవద్గీత 13.35 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உடலுக்கும் உடலை அறிபவனுக்கும் உள்ள வேறுபாட்டையும், ஜட இயற்கையிலிருந்து விடுபடும் செயல்முறையையும் அறிவின் கண்களால் உணர்ந்தவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்
Swami Mukundananda
13. க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency