உப1த்3ரஷ்டா1னுமன்தா114ர்தா1 போ4க்1தா1 மஹேஶ்வர:|

1ரமாத்1மேதி1 சா1ப்1யுக்1தோ1 தே3ஹே‌ஸ்மின்பு1ருஷ:ப1ர: ||23||

உபத்ரஷ்டா-—சாட்சி; அனுமந்தா—--அனுமதிப்பவர்; ச—--மற்றும்; பர்தா—-ஆதரவாளர்; போக்தா—--ஆழ்நிலையில் அனுபவிப்பவர்; மஹா-ஈஶ்வரஹ—--இறுதிக் கட்டுப்பாட்டாளர்; பரம-ஆத்மா—--ஒப்புயர்வற்ற ஆன்மா; இதி--—அதை; ச அபி--—மற்றும், மேலும்; உக்தஹ--கூறப்படுகிறது; தேஹே--—உடலுக்குள்ளே; அஸ்மின்--—இது; புருஷஹ பரஹ--—ஒப்புயர்வற்ற இறைவன்

అనువాదం

BG 13.23: உடலுக்குள்ளும் பரமாத்மா வசிக்கிறார். அவர் சாட்சி, அனுமதியளிப்பவர், ஆதரவாளர், ஆழ்நிலை அனுபவிப்பவர், இறுதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் பரமாத்மா (உச்ச ஆத்மா) என்று கூறப்படுகிறது.

వ్యాఖ్యానం

உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மா ( தனிப்பட்ட ஆன்மா) நிலையை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். இப்பொழுது இந்த வசனத்தில், உடலுக்குள்ளும் வசிக்கும் பரமாத்மாவின் நிலையை விளக்குகிறார். அவர் முன்னர் 13.3 வசனத்திலும் ஆன்மா தனிப்பட்ட உடலைப் பற்றி அறிந்தவர் என்று கூறியபொழுது பரமாத்மாவைக் குறிப்பிட்டார், அதே சமயம் பரமாத்மா எல்லையற்ற உடல்கள் அனைத்தையும் அறிந்தவர் என்று அவர் கூறினார்.

எல்லா உயிர்களின் இதயத்திலும் அமைந்துள்ள பரமாத்மா விஷ்ணுவின் வடிவத்திலும் வெளிப்படுகிறார்.. இந்த படைப்பை பராமரிக்கும் பொறுப்பு விஷ்ணுவின் வடிவத்தில் உள்ளது. அவர் பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ள க்ஷீர் சாகரில் (பாற்கடல்) தனது தனிப்பட்ட வடிவில் வசிக்கிறார். அவர் பரமாத்மாவாக அனைத்து உயிர்களின் இதயங்களிலும் வசிக்க தன்னை விரிவுபடுத்துகிறார். உள்ளே அமர்ந்து, அவர் அவர்களின் செயல்களைக் குறித்து அவர்களின் கர்மங்களைக் கணக்கிட்டு, சரியான நேரத்தில் முடிவுகளை வழங்குகிறார். ஒவ்வொரு வாழ்நாளிலும் ஜீவாத்மா எந்த உடலைப் பெறுகிறதோ, அவர் ஜீவாத்மாவுடன் (தனி ஆன்மா) செல்கிறார். பாம்பு, பன்றி அல்லது பூச்சியின் உடலில் வசிக்க அவர் தயங்குவதில்லை. முண்ட3கோ11நிஷத3ம் கூறுகிறது:

த்3வா ஸுப1ர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமானம் விருக்ஷம் பரி1ஷஸ்வஜாதே1

1யோரன்யஹ பி1ப்11லம் ஸ்வாத்3வத்1ய நஶ்னநந்யோ அபி4சா11ஶீதி1

ஸமாநே விருக்ஷே பு1ருஷோ நிமக்3னோ-நிஶயா ஶோச1தி1 முஹ்யமானஹ

ஜுஷ்ட1ம் யதா31ஶ்யத்1யந்யமீஶ மஸ்ய மஹிமானமிதி1 வீத1ஶோக1ஹ (3.1.1–2).

'இரண்டு பறவைகள் மரத்தின் (இதயத்தில்) கூட்டில் (உடலில்) உயிருள்ள வடிவில் அமர்ந்துள்ளன. அவையே ஜீவாத்மா மற்றும் பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி முதுகைக் கொண்டுள்ளது மற்றும் மரத்தின் பலனை அனுபவிப்பதில் மும்முரமாக உள்ளது (உடலில் வசிக்கும் பொழுது அது பெறும் கர்மங்களின் பலன்கள்). இனிப்பான பழம் வந்தால் மகிழ்ச்சி அடைகிறது; ஒரு கசப்பான பழம் வந்தால், அது வருத்தம் அடைகிறது. பரமாத்மா ஜீவாத்மாவின் நண்பர், ஆனால் அவர் தலையிடுவதில்லை; அவர் உட்கார்ந்து பார்க்கிறார். ஜீவாத்மா பரமாத்மாவை திரும்பி நோக்கினால், அதன் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும்.’ ஜீவாத்மாவுக்கு தன் விருப்பப்படி கடவுளை நோக்கி திரும்புவதற்கும் கடவுளிடமிருந்து மறுபுறம் திரும்புவதற்கும் ஆன சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சுதந்திர விருப்பத்தை முறையற்ற முறையில் பயன்படுத்துவதால், ஜீவாத்மா அடிமையாகிறது; அதன் சரியான பயன்பாட்டைக் கற்றுக்கொள்வதன் மூலம், அது கடவுளின் நித்திய சேவையை அடைய முடியும் மற்றும் எல்லையற்ற பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
13. க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency