த்4யானேனாத்1மனி ப1ஶ்யன்தி1 கே1சி1தா3த்1மானமாத்1மனா |

அன்யே ஸாங்யேன யோகே3ன க1ர்மயோகே3ன சா11ரே ||25||

த்யானேன—--தியானத்தின் மூலம்; ஆத்மனி—--ஒருவருடைய இதயத்தில்; பஶ்யந்தி—--அறிகிறார்கள்; கேசித்--—சிலர்; ஆத்மானம்--—உயர்ந்த ஆன்மாவை; ஆத்மனா--—மனதால்; அன்யே—--மற்றவர்கள்; ஸாங்க்யேன--—அறிவை வளர்ப்பதன் மூலம்; யோகேன--—யோக அமைப்பினால்; கர்ம-யோக—--செயல் பாதையின் மூலம் கடவுளுடன் ஐக்கியமடைவது; ச--—மற்றும்; அபரே----மற்றவர்கள்

అనువాదం

BG 13.25: சிலர் தியானத்தின் மூலம் பரமாத்மாவை தங்கள் இதயங்களில் உணர முயற்சிக்கிறார்கள், மற்றவர்கள் அறிவை வளர்ப்பதன் மூலம் அதைச் செய்ய முயற்சிக்கிறார்கள், இன்னும் சிலர் அந்த உணர்வை செயல்பாட்டின் மூலம் அடைய முயற்சிக்கின்றனர்.

వ్యాఖ్యానం

பன்முகத்தன்மை என்பது கடவுளின் படைப்பின் உலகளாவிய பண்பு. ஒரு மரத்தின் இரண்டு இலைகள் ஒரே மாதிரி இல்லை; எந்த இரண்டு மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான கைரேகைகள் இல்லை; எந்த இரண்டு மனித சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான அம்சங்கள் இல்லை. அவ்வாறே, எல்லா ஆத்மாக்களும் தனித்துவமானவை; வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் அவர்களின் தனித்துவமான பயணத்தில் பெறப்பட்ட தனித்துவமான பண்புகளை அவர்கள் கொண்டுள்ளனர். எனவே, ஆன்மீகப் பயிற்சியிலும், அனைவரும் ஒரே மாதிரியான பயிற்சியில் ஈர்க்கப்படுவதில்லை.. பகவத் கீதை மற்றும் வேத ஶாஸ்திரங்களின் அழகு என்னவென்றால், மனிதர்களிடையே உள்ள இந்த உள்ளார்ந்த வேறுபாட்டை உணர்ந்து அவைகளின் அறிவுறுத்தல்களில் அவற்றை. விளக்குகின்றன.

சில ஆன்மீக ஆர்வலர்கள் தங்கள் மனதை கட்டுக்குள் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு விளக்குகிறார். அவர்கள் தங்கள் இதயங்களுக்குள் அமர்ந்த கடவுளை தியானிப்பதில் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களின் மனம் தங்களுக்குள் இருக்கும் இறைவனின் மீது தங்கும்பொழுது அவர்கள் அனுபவிக்கும் ஆன்மீக ஆனந்தத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

மற்றவர்கள் தங்கள் அறிவாற்றலைப் பயிற்சி செய்வதில் திருப்தி அடைகிறார்கள். ஆன்மா மற்றும் உடல், மனம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகியவற்றின் வேறுபாடு பற்றிய எண்ணம் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. ஶ்ரவணம், மனனம், நிதி4த்2யாஸனம் (கேட்பது, சிந்தித்தல் மற்றும் உறுதியான நம்பிக்கையை கிரகித்துக் கொள்தல்) செயல்முறைகள் மூலம் ஆன்மா, கடவுள் மற்றும் மாயா ஆகிய மூன்றைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இன்னும் சிலர் அர்த்தமுள்ள செயலில் ஈடுபடும்பொழுது அவர்களின் ஊக்க ஊக்க எழுச்சியை உணர்கிறார்கள். அவர்கள் கடவுளால் கொடுக்கப்பட்ட திறன்களை அவருக்காகச் செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்களது கடைசி ஆற்றல் துளியை கூட கடவுளுக்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்பது, அவர்களுக்கு வேறு எதுவும் திருப்தி அளிக்காது இவ்வாறாக, அனைத்து வகையான பயிற்சியாளர்களும் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

ஸா வித்4யா த1ன்மதி1ர்யயா (4.29.49)

‘உண்மையான அறிவு என்பது கடவுள் மீது அன்பை வளர்க்க உதவுகிறது. செயல்களை இறைவனின் திருப்திக்காகச் செய்யும்பொழுது அது நிறைவேறும்.’

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
13. க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency