யத1ன்தோ1 யோகி3னஶ்சை1னம் ப1ஶ்யன்த்1யாத்1மன்யவஸ்தி21ம் |

யத1ன்தோ1‌ப்1யக்1ருதா1த்1மானோ நைனம் ப1ஶ்யன்த்1யசே11ஸ: ||11||

யதந்தஹ-—-முயற்சி செய்யும்; யோகினஹ--—யோகிகள்; ச—--கூட; ஏனம்---—இது (ஆத்மா); பஶ்யந்தி--— காண்கிறார்கள்; ஆத்மனி---—உடலில்; அவஸ்திதம்----இருப்பதை; யதந்தஹ----முயற்சி; அபி—--இருந்தாலும்; அக்ரித-ஆத்மானஹ----யாருடைய மனங்கள் தூய்மைப்படுத்தப்படவில்லையோ; ந-—இல்லை; ஏனம்----அதை; பஶ்யந்தி---உணர்ந்து கொள்ள முடியும்;அசேதஸஹ----அறிய முடியாது.

అనువాదం

BG 15.11: முயற்சி செய்யும் யோகிகளும் உடலில் உள்ள ஆன்மாவை உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும், யாருடைய மனம் தூய்மையடையவில்லையோ அவர்கள் அவ்வாறு செய்ய முயன்றாலும் அவர்களால் அதை அறிய முடியாது.

వ్యాఖ్యానం

அறிவுக்காக பாடுபடுவது போதாது; நமது முயற்சியும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும். மனிதர்கள் உலகத்தை அறிந்து கொண்ட அதே வழிகளில் தெய்வீக ஆளுமைகளை அறிய முயல்கிறார்கள். அவர்கள் தங்கள் புலன்களின் உணர்வையும் மற்றும் அறிவாற்றல் சக்தியையும் அனைத்து அறிவையும் சரியா தவறா என்பதை தீர்மானிப்பதற்கான அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் புலன்களால் எதையாவது உணர முடியாவிட்டால், அவர்களின் புத்தியால் அதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அந்த உருபொருள் இருக்க முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள். மேலும் அவர்களின் புலன்களால் ஆன்மாவை உணர முடியாததால், அத்தகைய ஆன்மா இல்லை என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். இந்த நிகழ்வை விவரிக்கும் அலெக்சிஸ் கேரல் தனது மேன் தி அந்நோன் என்ற புத்தகத்தில் கூறுகிறார்:

நம் காலத்தின் அறிவியல் அல்லது தத்துவ நம்பிக்கைகளின் சட்டத்திற்குப் பொருந்தாத விஷயங்களை நிராகரிக்கும் இயல்பான போக்கை நம் மனம் கொண்டுள்ளது. அவை அவற்றின் சூழல் மற்றும் சகாப்தத்தின் தப்பெண்ணங்களால் நிறைவுற்றவை. தற்போதைய கோட்பாடுகளால் விளக்க முடியாத உண்மைகள் இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். தற்போது, ​​விஞ்ஞானிகள் டெலிபதி (தொலைவிலுணர்தல்) மற்றும் பிற மனோதத்துவ நிகழ்வுகளை மாயைகளாகவே பார்க்கின்றனர். வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக் கொண்ட தெளிவான உண்மைகள் அடக்கப்படுகின்றன.

நியாய தரிஶனம் இந்த வகையான சிந்தனையை கூ1-1மண்டூ31-ந்யாயா (கிணற்றில் உள்ள தவளையின் தர்க்கம்) என்று அழைக்கிறது. ஒரு தவளை ஒரு கிணற்றில் வசித்து வந்தது மற்றும் அதன் சொந்த குடியிருப்பின் பரிமாணங்களை நன்கு அறிந்திருந்தது. ஒரு நாள், ரண கான்கிரிவோரா (கடலில் வாழும் தவளை இனம்) கிணற்றில் குதித்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். கிணற்றுத் தவளை, கடல் தவளையிடம், ‘நீ எங்கிருந்து வந்தாய், இந்தக் கடல் எவ்வளவு பெரியது?’ என்று கேட்டது.

ரண கான்கிரிவோரா, ‘இது மிகப் பெரியது’ என்று பதிலளித்தது.

‘கிணற்றைவிட ஐந்து மடங்கு பெரியதா?’

‘இல்லை, மிகப் பெரியது.’

கிணற்றை விட பத்து மடங்கு பெரியதா?’

‘இல்லை, இன்னும் பெரியது.’

‘நூறு முறை?’

‘இல்லை, அது ஒன்றுமில்லை. இது மிகப் பெரியது.

‘நீ பொய் சொல்கிறாய்’ என்று கிணற்றின் தவளை சொன்னது, ‘எனது கிணற்றைவிட100 மடங்குக்கு மேல் பெரிதாக எப்படி இருக்க முடியும்?’

கிணற்றின் வாழ்நாள் அனுபவத்தால் தவளையின் அறிவு நிலைப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, அது பரந்த கடலை புரிந்து கொள்ள முடியவில்லை இதேபோல், தங்கள் நுண்ணறிவுகளின் அனுபவத்தால் வரையறுக்கப்பட்ட, பொருள்முதல்வாதிகள் பொருள் சாராத ஆன்மாவின் இருப்புக்கான சாத்தியத்தை ஏற்க மறுக்கிறார்கள். இருப்பினும், ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள், தங்கள் பொருள் அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவு இருக்க முடியும் என்பதை உணர்கிறார்கள். மனத்தாழ்மை மற்றும் நம்பிக்கையுடன், அவர்கள் ஆன்மீகப் பாதையில் நடக்கத் தொடங்கி, தங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். மனம் தூய்மையடைந்தால், ஆன்மாவின் இருப்பு இயல்பாகவே உணரப்படுகிறது. பின்னர் வேதத்தின் உண்மை உணர்தல் மூலம் அனுபவிக்கப்படுகிறது.

புலன்களால் ஆன்மாவை முதலில் அறிய முடியாதது போலவே, கடவுளும் அவற்றின் எல்லைக்குள் இல்லை, மேலும் கடவுள், அறிவின் கண்களால் உணரப்பட வேண்டும். பின்வரும் வசனங்களில், கடவுள் இருப்பதை உணரும் முறையை ஸ்ரீ கிருஷ்ணர் பகிர்ந்து கொள்கிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
15. புருஷோத்தம யோகம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency