ஸர்வகு3ஹ்யத1மம் பூ4ய: ஶ்ருணு மே ப1ரமம் வச1: |
இஷ்டோ1ஸி மே த்1ருட4மிதி1 த1தோ1 வக்ஷ்யாமி தே1 ஹித1ம் ||64||
ஸர்வ-குஹ்ய-தமம்—--அனைத்திலும் மிகவும் ரகசியமானதை; பூயஹ--—மீண்டும்; ஶ்ருணு---- கேள்; மே--—என்; பரமம்--—உயர்ந்த; வசஹ--—அறிவுறுத்தலை; இஷ்டஹ அஸி---—நீ பிரியமானவன்; மே--—எனக்கு; த்ரிடம்—மிகவும்;இதி--—இவ்வாறு; ததஹ--— என்பதால்; வக்ஷ்யாமி--—நான் வெளிப்படுத்துகிறேன்; தே--—உன்;ஹிதம்—நன்மைக்காக.
BG 18.64: அனைத்து அறிவிலும் மிகவும் ரகசியமான எனது உயர்ந்த அறிவுறுத்தலை மீண்டும் கேள். நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்பதால் உன் நலனுக்காக இதை வெளிப்படுத்துகிறேன்.
ஒரு ஆசிரியர் ஆழ்ந்த ரகசியத்தை அறிந்திருக்கலாம், ஆனால் அவர் அதை மாணவருக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதைப் பகிர்ந்து கொள்வதற்கு முன், அதைப் பெறுவதற்கு மாணவர்களின் தயார்நிலை, புரிந்துகொள்வது மற்றும் பயனடைவது போன்ற பல விஷயங்களை அவர் கருத்தில் கொள்கிறார். பகவத் கீதையின் தொடக்கத்தில், அர்ஜுனன் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கண்டு திகைத்து, ஸ்ரீ கிருஷ்ணரிடம் வழிகாட்டுதலைக் கேட்டார். ஒப்புயர்வற்ற பகவான் அக்கறை மற்றும் கருத்து பாட்டுடன் பதினெட்டு அத்தியாயங்கள் மூலம் சிறிது சிறிதாக அர்ஜுனனின் புரிதலை மேம்படுத்தி, அவருக்கு ஞானம் அளித்தார். அர்ஜுன் இந்தச் செய்தியை நன்றாகப் பெறுவதைப் பார்த்த ஸ்ரீ கிருஷ்ணர், இறுதியான மற்றும் மிக ஆழமான அறிவையும் அர்ஜுனனால் புரிந்துகொள்ளமுடியும் என்று இப்போது நம்பிக்கை கொள்கிறார். மேலும், அவர் இஷ்டோ’1ஸி மே த்3ருட4மிதி1 என்கிறார், அதாவது, ‘நீ என்னுடைய மிக அன்பான நண்பன் என்பதால் நான் உன்னிடம் இதைப் பேசுகிறேன். எனவே, நான் உன் மீது ஆழ்ந்த அக்கறையோடும் உண்மையோடும் உன் சிறந்த நலத்தை விரும்புகிறேன்’.
ஸர்வகு3ஹ்யத1மம் பூ4ய: ஶ்ருணு மே ப1ரமம் வச1: |
இஷ்டோ1ஸி மே த்1ருட4மிதி1 த1தோ1 வக்ஷ்யாமி தே1 ஹித1ம் ||64||
அனைத்து அறிவிலும் மிகவும் ரகசியமான எனது உயர்ந்த அறிவுறுத்தலை மீண்டும் கேள். நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்பதால் உன் நலனுக்காக இதை வெளிப்படுத்துகிறேன்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!