இத3ம் தே1 நாத1ப1ஸ்கா1ய நாப4க்1தா1ய க1தா3சன |
ந சா1ஶுஶ்ரூஷவே வாச்1யம் ந ச1 மாம் யோப்4யஸூயதி1 ||
67 ||
இதம்--—இது; தே--—உன்னால்; ந--—ஒருபோதும் இல்லை; அதபஸ்காய—--துறவறம் இல்லாதவர்களுக்கும்; ந—ஒருபோதும் இல்லை; அபக்தாய—பக்தி இல்லாதவர்களுக்கும்;கதா சன—--எந்த நேரத்திலும்; ந--—ஒருபோதும் இல்லை; ச--—மேலும்; அஶுஶ்ருஷவே—ஆன்மீக விஷயங்களைக் கேட்க விரும்பாதவர்களிடமும் ; வாச்யம்—பேசப்பட வேண்டும்; ந—ஒருபோதும் இல்லை; ச—மேலும்; மாம்---—என் மீது; யஹ---—யார்;அப்யஸூயதி---—பொறாமை கொண்டவர்களிடமும்.
BG 18.67: இந்த துறவறம் இல்லாதவர்களுக்கும், பக்தி இல்லாதவர்களுக்கும், கேட்க விரும்பாதவர்களிடமும் (ஆன்மீக விஷயங்களைக்) ஒருபோதும் விளக்கக்கூடாது. குறிப்பாக என் மீது பொறாமை கொண்டவர்களிடமும் பேசக்கூடாது.
கடவுள் பக்தியில் ஒருவர் நிலைத்திருந்தால், பொருள் கடமைகளைத் துறப்பதில் எந்தப் பாவமும் இல்லை என்பது முந்தைய வசனத்தில் விளக்கப்பட்டது. இருப்பினும், இந்த அறிவுறுத்தலில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் கடவுளின் மீது அன்பை ஏற்படுவதற்கு முன்கூட்டியே பொருள் கடமைகளை விட்டுவிட்டால் நாம் இங்கேயும் அங்கேயும் இல்லாத ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, கர்ம ஸன்யாஸம் அதற்குத் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஏற்றது. நாம் எதற்கு தகுதியுடையவர்கள் என்பது நமது திறன்களையும் பாதைகளின் கடினத்தன்மையையும் அறிந்த உங்கள் குருவால் தீர்மானிக்கப்படுகிறது. இதேபோல், பெரும்பான்மையான மக்கள் செயல் யோகத்திற்கு தகுதியுடையவர்கள். மேலும், அவர்கள் முன்கூட்டியே செயல் துறவறத்தை மேற்கொள்வது ஒரு பெரிய முட்டாள்தனமாக இருக்கும். தங்களின் பௌதிகஉலக தர்மத்தை நிறைவேற்றவும், பக்தியுடன் இணைந்து செயல்படவும் அவர்களுக்கு அறிவுறுத்துவது நல்லது. அதனால்தான், ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில், தாம் வழங்கிய இந்த ரகசிய போதனை அனைவருக்கும் இல்லை என்று கூறுகிறார். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன், இந்த போதனைக்கான அவர்களின் தகுதியை நாம் சரிபார்க்க வேண்டும்.
இந்த எச்சரிக்கை வார்த்தை குறிப்பாக முந்தைய வசனத்தின் ரகசிய போதனைகளுக்கும், பொதுவாக, பகவத் கீதையின் முழுச் செய்திக்கும் பொருந்தும். ஸ்ரீ கிருஷ்ணர் மீது பொறாமை கொண்ட ஒருவரிடம் இதை விளக்கினால், அந்த நபர், 'ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் கர்வத்துடன் இருந்தார். அர்ஜுனனிடம் தன்னை மகிமைப்படுத்துமாறு கூறிக்கொண்டே இருந்தார்.’ என்று தவறாக புரிந்து கொள்வார் போதனைகளைத் தவறாகப் புரிந்து கொள்வதன் மூலம், நம்பிக்கையற்ற அவர் தெய்வீகச் செய்தியால் பாதிக்கப்படுவார். ப1த்3ம பு1ராணம் மேலும் கூறுகிறது:
அஶ்ரத்3த3தா4னே விமுகே2 ’பி அஶ்ரிண்வதி1
யஶ் சோ1ப1தே3ஶஹ ஶிவ-நாமப1ராத4ஹ
‘கடவுள் மீது நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஆழ்நிலை அறிவுரைகளை வழங்குவதன் மூலம், அவர்களைக் குற்றவாளிகளாக ஆக்குகிறோம்.’ எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் கேட்பவர்களின் தகுதியின்மையை விவரிக்கிறார்.
இத3ம் தே1 நாத1ப1ஸ்கா1ய நாப4க்1தா1ய க1தா3சன |
ந சா1ஶுஶ்ரூஷவே வாச்1யம் ந ச1 மாம் யோப்4யஸூயதி1 ||
67 ||
இந்த துறவறம் இல்லாதவர்களுக்கும், பக்தி இல்லாதவர்களுக்கும், கேட்க விரும்பாதவர்களிடமும் (ஆன்மீக விஷயங்களைக்) ஒருபோதும் விளக்கக்கூடாது. குறிப்பாக என் மீது பொறாமை கொண்டவர்களிடமும் பேசக்கூடாது.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!