ஶ்ரத்3தா4வானனஸூயஶ்ச1 ஶ்ருணுயாத3பி1 யோ நர: |

ஸோ‌பி1 முக்11: ஶுபா4ன்ல்லோகா1ன்ப்1ராப்1னுயாத்1புண்யக1ர்மணாம் ||
71 ||

ஶ்ரத்தா—வான்--—-நம்பிக்கையோடு; அனஸூயஹ---—பொறாமை இல்லாமல்; ச—--மற்றும்; ஶ்ரிணுயாத்—--கேட்பவர்களும் கூட; அபி---—நிச்சயமாக; யஹ--—யார்; நரஹ--—ஒரு நபர்; ஸஹ---அந்த நபர்; அபி--—மேலும்; முக்தஹ--—விடுபட்டு; ஶுபான்—--மங்களகரமான; லோகான்--—ஸ்தலங்களை; ப்ராப்னுயாத்—--அடைவார்கள்; புண்யகர்மணாம்—பக்தியுள்ளவர்கள்.

అనువాదం

BG 18.71: ஆயினும் இந்த ஞானத்தை நம்பிக்கையோடு பொறாமை இன்றி கேட்பவர்களும் கூட பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியவான்கள் வசிக்கும் புண்ணிய ஸ்தலங்களை அடைவார்கள்.

వ్యాఖ్యానం

ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடலின் ஆழமான உட்கருத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு அனைவருக்கும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் வெறும் நம்பிக்கையுடன் கேட்டால் அவர்களும் பலன் அடைவார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே உறுதியளிக்கிறார். கடவுள் அவர்களுக்குள் அமர்ந்திருக்கிறார்; அவர் அவர்களின் நேர்மையான முயற்சியைக் கவனித்து, அதற்கு வெகுமதி அளிப்பார்.

ஜகத்குரு சங்கராச்சாரியாரின் சீடரான சனந்தாவைப் பற்றிய ஒரு கதை இந்தக் கருத்தை விளக்குகிறது:

ஸனந்தா கல்வியறிவு இல்லாதவர், மற்ற சீடர்களைப் போல் அவரது குருவின் போதனைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சங்கராச்சாரியார் சொற்பொழிவு ஆற்றும்போது, ​​மிகுந்த கவனத்துடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் கேட்பார். ஒரு நாள், அவர் ஆற்றின் மறுகரையில் தனது குருவின் ஆடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். வகுப்புக்கு நேரமாகிவிட்டது, மற்ற சீடர்கள், ‘குருஜி, தயவுசெய்து வகுப்பைத் தொடங்குங்கள்’.

அதற்கு சங்கராச்சாரியார், ‘காத்திருப்போம்; ஸனந்தா இங்கே இல்ல.’

ஆனால் குருஜி, அவரால் எதையும் புரிந்து கொள்ள முடியாது’ என்று சீடர்கள் வற்புறுத்தினார்கள்.

'அது உண்மை; இன்னும், அவன் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்கிறான், அதனால் நான் அவனை ஏமாற்ற விரும்பவில்லை.' ”என்று சங்கராச்சாரியார் கூறினார்.

பிறகு, ​​நம்பிக்கையின் வலிமையைக் காட்ட, சங்கராச்சாரியார், ‘ஸனந்தா! தயவு செய்து இங்கே வா.' என்று கூறினார்.

குருவின் வார்த்தைகளைக் கேட்டதும் ஸனந்தா தயங்கவில்லை. அவர் தண்ணீரில் ஓடினார். அவர் கால் வைத்த இடங்களிலெல்லாம் தாமரை மலர்கள் துளிர்விட்டதாகக் கதை சொல்கிறது. அவர் மற்ற கரைக்குச் சென்று தனது குருவுக்கு வணக்கம் செலுத்தினார். அந்த நேரத்தில், ஸனந்தாவின் வாயிலிருந்து அதிநவீன சமஸ்கிருதத்தில் குருவை புகழ்ந்து ஒரு ஸ்துதி வெளிப்பட்டது. இதைக் கேட்ட மற்ற சீடர்கள் வியப்படைந்தனர். அவரது காலடியில் தாமரை மலர்கள் மலர்ந்ததால், அவரது பெயர் 'பத்மபதா' என்று ஆனது- அதாவது 'காலடியில் தாமரை மலர்களை உடைய மனிதன்'. அவர் சுரேஷ்வராச்சாரியர், ஹஸ்தமலக் மற்றும் த்ரோடகாச்சாரியர் ஆகியோருடன் சங்கராச்சாரியாரின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரானார்.

இந்த வசனத்தில், புனிதமான உரையாடலை மிகுந்த நம்பிக்கையுடன் கேட்பவர்களும் படிப்படியாக தூய்மை அடைவார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உறுதியளிக்கிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
18. மோக்ஷ ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency