யஞ்ஞஶிஷ்டா1ஶின: ஸன்தோ1 முச்1யந்தே1 ஸர்வகி1ல்பி3ஷை: |

பு4ஞ்ஜதே1 தே1 த்1வக4ம் பா1பா1 யே ப11ன்த்1யாத்1மகா1ரணாத்2 ||13||

யஞ்ஞ-ஶிஷ்டா—--பலியில் வழங்கப்படும் உணவின் எச்சங்கள்; அஶினஹ—--உண்பவர்கள்; ஸந்தஹ—-- துறவிகள்; முச்யந்தே—--விடுவிக்கப்படுகின்றனர்; ஸர்வ—--எல்லா வகையான; கில்பிஷைஹி—--பாவங்களிலிருந்து; புஞ்ஜதே—--அனுபவிப்பவர்கள்; தே--—அவர்கள்; து—ஆனால்; அகம்--—பாவங்கள்; பாபாஹா--—பாவிகள்; யே--—யார்; பசந்தி--—சமையல் (உணவு); ஆத்ம-காரணாத்---அவர்களின் சொந்த நலனுக்காக

అనువాదం

BG 3.13: யாகத்தில் முதலில் அளிக்கப்படும் உணவை உண்ணும் ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்கள் சொந்த இன்பத்திற்காக உணவை சமைக்கும் மற்றவர்கள் உண்மையில் பாவத்தை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.

వ్యాఖ్యానం

வேத மரபில் கடவுளின் இன்பத்துக்கானது என்ற உணர்வுடன் உணவு சமைக்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் ஒரு பரிமாறல் பின்னர் ஒரு தட்டில் வைக்கப்பட்டு, இறைவனை வந்து உண்ணும்படி வாய்மொழி அல்லது மனப் ப்ரார்த்தனை செய்யப்படுகிறது. ப்ரஸாதத்திற்குப் பிறகு, தட்டில் உள்ள உணவு ப்ரஸாதமாகக் கருதப்படுகிறது (கடவுளின் அருள்) தட்டு மற்றும் பாத்திரங்களில் உள்ள உணவுகள் அனைத்தும் கடவுளின் அருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த உணர்வில் உண்ணப்படுகிறது. பிற மத மரபுகளும் இதே போன்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகின்றன. கிறித்துவம் நற்கருணை சடங்கைக் கொண்டுள்ளது, அங்கு ரொட்டியும் மதுவும் புனிதப்படுத்தப்பட்டு பின்னர் பங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் ப்ரஸாதம்(கடவுளின் அருள்) முதலில் கடவுளுக்கு வழங்கப்படும் உணவு) ஒருவரை பாவத்திலிருந்து விடுவிக்கிறது என்று கூறுகிறார், அதே நேரத்தில் உணவை முதலில் கடவுளுக்கு வழங்காமல் சாப்பிடுபவர்கள் பாவம் செய்கிறார்கள்.

அசைவப் பொருட்களைக் கடவுளுக்குப் படைத்துவிட்டு, எஞ்சியதையே அவருடைய ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்ளலாமா என்ற கேள்வி எழலாம். இந்த கேள்விக்கான பதில் என்னவென்றால், வேதங்கள் மனிதர்களுக்கு சைவ உணவை பரிந்துரைக்கின்றன, அதில் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவுகள் அடங்கும். வேத கலாச்சாரத்தைத் தவிர, உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களில் விலங்குகளின் கல்லறையாக மாற்றும் அசைவ உணவை நிராகரித்தனர். அவர்களில் பலர் இறைச்சி உண்ணும் குடும்பங்களில் பிறந்திருந்தாலும், அவர்கள் ஆன்மீக பாதையில் முன்னேறியதால், அவர்கள் சைவ வாழ்க்கை முறைக்கு ஈர்க்கப்பட்டனர். சைவத்தை ஆதரிக்கும் சில பிரபலமான சிந்தனையாளர்கள் மற்றும் ஆளுமைகளின் மேற்கோள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

உயிர்களுக்குப் பயத்தை உண்டாக்காமல் இருக்க, சீடன் இறைச்சி உண்பதைத் தவிர்க்கட்டும்... ஸாதுக்களால் உண்ணப்படும் உணவு ஞானிகளின் உணவு; அது இறைச்சியைக் கொண்டிருக்கவில்ல.

— புத்தர்

நீங்கள் இயற்கையாகவே அத்தகைய உணவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் அறிவித்தால், முதலில் நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்களோ அதை நீங்களே கொல்லுங்கள். எவ்வாறாயினும், அதை உங்கள் சொந்த வளங்கள் மூலம் மட்டுமே செய்யுங்கள்.

- ரோமன் புளூட்டார்ச், 'உணவுஉண்பது' என்ற கட்டுரையிலிருந்து.

மனிதர்கள் மிருகங்களை கொன்று குவிக்கும் வரை ஒருவரையொருவர் கொல்வார்கள். .உண்மையில், கொலை மற்றும் வலியின் விதைகளை விதைப்பவர் மகிழ்ச்சியையும்அன்பையும்அறுவடைசெய்யமுடியாது. - -பைத்தகோரஸ்

கசாப்புக் கடைக்காரர்களின் இறைச்சி வாழ்க்கைக்குத் தேவையானதா என்று சந்தேகிக்கலாம்… ஒரு மனிதனுக்கு கசாப்புக் கசாப்புக் கடைக்காரர்களின் இறைச்சியை உண்ண வேண்டும் என்ற கண்ணியமான மனப்பான்மை தேவையில்லை.

-ஆடம் ஸ்மித்

அகிம்சையானது உயர்ந்த நெறிமுறைகளுக்கு வழிவகுக்கிறது, இது அனைத்து பரிணாம வளர்ச்சியின் இலக்காகும். எல்லா உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதை நிறுத்தாத வரை, நாம் அனைவரும் காட்டுமிராண்டிகள்.

-தாமஸ் எடிசன்

அவர் உண்மையிலேயே மற்றும் தீவிரமாக ஒரு நல்ல வாழ்க்கை வாழ முற்பட்டால், அவர் எப்போதும் தவிர்க்கும் முதல் விஷயம் விலங்கு உணவைப் பயன்படுத்துவதாகும், ஏனெனில் … அதன் பயன்பாடு முற்றிலும் ஒழுக்கக்கேடானது, ஏனெனில் இது தார்மீக உணர்வுக்கு முரண்பாடான செயலைச் செய்வதை உள்ளடக்கியது - கொலை செய்வது.

-லியோ டால்ஸ்டாய்

எனது தோற்றம் என் வயதை ஒத்த தாக இருக்கிறது. மற்றவர்கள்தான் தங்கள் வயதை விடவயது முதிர்ந்த தோற்றம் கொண்டவர்களாக தென்படுகிறார்கள். பிணத்தை உண்பவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

--- ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

உண்மையிலேயே மனிதன் மிருகங்களின் ராஜா, ஏனென்றால், அவனுடைய மிருகத்தனம் அவற்றை மீறுகிறது. நாம் மற்றவர்களின் மரணத்தால் வாழ்கிறோம். நாம் புதைகுழிகள்! நான் சிறு வயதிலிருந்தே இறைச்சியின் பயன்பாட்டைத் தவிர்த்துவிட்டேன்...

----லியோனார்டோ டா வின்சி

இறந்த மாடு அல்லது ஆடு மேய்ச்சலில் கிடப்பது அழுகும் பிணம் என்று அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு கசாப்புக் கடையில் அதே மாதிரியான அழுகும் பிணம் சமைப்பதற்கு உரிய உணவாக தொங்க விடப்படுகிறது.

ஜே. எச். கெல்லாக்

சைவ வாழ்க்கை முறை, மனித குணத்தின் மீதான அதன் முற்றிலும் உடல் ரீதியான தாக்கத்தால், மனித குலத்தை மிகவும் மிகவும் பயனுள்ள வகைகள் பாதிக்கும் என்பது என் கருத்து.

-ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்

ஒரு கட்டத்தில் நம் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய சக உயிரினங்களைக் கொல்வதை நாம்நிறுத்த வேண்டும் என்று ஆன்மீக முன்னேற்றம்,கோருகிறது என்று நான் உணர்கிறேன்.

--மகாத்மா காந்தி

இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் இன்னும் ஒருபடி மேற்சென்று, தாவரங்களில் கூட உயிர் உள்ளது என்றும், அதை நாம் நமது புலன் இன்பத்திற்காக சாப்பிட்டால், உயிரை அழிக்கும் கர்ம வினைகளில் நாம் பிணைக்கப்படுகிறோம் என்றும் கூறுகிறார். வசனத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஆத்மா-காரணாத், அதாவது, 'ஒருவரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக'. கடவுளுக்குச் செய்த யாகத்தின் எச்சமாக உணவைச் சாப்பிட்டால், உணர்வு மாறுகிறது. நாம் நமது உடலை கடவுளின் சொத்தாகப் பார்க்கிறோம், அது அவருடைய சேவைக்காக நம் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட உணவை, அவரது அருளால், அது உடலுக்கு ஊட்டமளிக்கும் என்ற நோக்கத்துடன் நாம் சாப்பிடுகிறோம். இந்த உணர்வில், முழு செயல்முறையும் தெய்வீகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பரத முனிவர் கூறுகிறார்:

வஸுஸதோ1 க்1ரது13க்ஷௌ கா1ல கா1மௌ த்4ரிதி 1ஹி கு1ருஹு

பு 1ருரவா ம1த்3ரவாஸ்ச1 விஶ்வதே3வாஹா ப்1ரகீ1ர்தி 1தா1ஹா

‘சமையல் செய்யும் போது, ​​பூச்சி, நெருப்பு, அரைக்கும் கருவிகள், தண்ணீர் பானை, துடைப்பம் போன்றவற்றால் உயிர்களுக்குத் தெரியாமல் வன்முறை ஏற்படுகிறது. தங்களுக்கு உணவு சமைப்பவர்கள் பாவத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் யஞ்ஞம் பாவ வினைகளை அழிக்கிறது.’

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
3. கர்ம யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency