நைவ த1ஸ்ய க்1ருதே1னார்தோ2 நாக்1ருதே1னேஹ க1ஶ்ச1ன |

ந சா1ஸ்ய ஸர்வபூ4தே1ஷு க1ஶ்சி13ர்த2வ்யபா1ஶ்ரய: ||18||

ந—--இல்லை; ஏவ—--உண்மையில்; தஸ்ய--—அவருடைய; கிருதேன—--கடமையை நிறைவேற்றுவதன் மூலம்; அர்த்தஹ—--ஆதாயம்; ந--—இல்லை; அக்ரிதேன--—கடமையை நிறைவேற்றாமல்; இஹ—--இங்கே; கஶ்சன--—எவையாயினும்; ந-—ஒருபோதும் இல்லை; ச-—-மற்றும்; அஸ்ய—-அந்த நபரின்; ஸர்வ---பூதேஷு-—எல்லா உயிர்களிலும்; கஶ்சித்—-ஏதேனும்; அர்த்த—-தேவை; வியபாஶ்ரயஹ---சார்ந்திருக்க

అనువాదం

BG 3.18: அத்தகைய சுயத்தை-உணர்ந்த ஆன்மாக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலோ அல்லது துறப்பதிலோ எதையும் பெறவோ அல்லது இழக்கவோ இல்லை. தங்கள் சுயநலத்தை நிறைவேற்ற மற்ற உயிரினங்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை

వ్యాఖ్యానం

இந்த சுயத்தை உணர்ந்த ஆளுமைகள் ஆன்மாவின் ஆழ்நிலை தளத்தில் நிலை பெற்றுள்ளனர். அவர்களின் ஒவ்வொரு செயலும் கடவுளின் சேவையில் ஆழ்நிலையானது. எனவே, வர்ணாஸ்ரம தர்மத்தின்படி, உலக மனிதர்களுக்கு உடல் அளவில் விதிக்கப்பட்ட கடமைகள் இனி அவர்களுக்குப் பொருந்தாது.

இங்கே, கர்மத்திற்கும் பக்திக்கும் இடையில் வேறுபாடு காட்டப்பட வேண்டும். முன்பு, ஸ்ரீ கிருஷ்ணர் கர்மம் அல்லது விதிக்கப்பட்ட உலகக் கடமைகளைப் பற்றிப் பேசி, அவற்றைக் கடவுளுக்குப் ப்ரஸாதமாகச் செய்ய வேண்டும் என்று கூறினார். மனதைத் தூய்மைப்படுத்தவும், உலக மாசுபாட்டிலிருந்து எழுவதற்கும் இது அவசியம். ஆனால் ஏற்கனவே கடவுளில் ஈர்க்கப்பட்டு மனத் தூய்மையை வளர்த்துக் கொண்ட சுய-உணர்ந்த ஆழ்நிலைவாதிகள் தியானம், வழிபாடு, கீர்த்தனை, குருவுக்கு சேவை போன்ற பக்தி அல்லது தூய ஆன்மீக நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அத்தகைய ஆத்மாக்கள் தங்கள் உலகக் கடமைகளை நிராகரித்தால், அது பாவமாக கருதப்படாது. அவர்கள் விரும்பினால் உலகக் கடமைகளை தொடர்ந்து செய்யலாம், ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

வரலாற்று ரீதியாக, புனிதர்கள் இரண்டு வகையானவர்கள். 1) ப்ரஹலாத், துருவ், அம்பரீஷ், ப்ருது மற்றும் விபீஷணன் போன்றவர்கள், ஆழ்நிலை தளத்தை அடைந்த பிறகும் தங்கள் உலகக் கடமைகளைத் தொடர்ந்து ஆற்றியவர்கள். இவர்கள் கர்ம யோகிகள் - வெளியில் அவர்கள் தங்கள் உடலால் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருந்தனர், அதே நேரத்தில் அவர்களின் மனம் கடவுளுடன் இணைந்திருந்தது. 2) சங்கராச்சாரியார், மத்வாச்சாரியார், ராமானுஜாச்சாரியார் மற்றும் சைதன்ய மஹாபிரபு போன்றவர்கள், தங்கள் உலகக் கடமைகளை நிராகரித்து, துறந்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டவர்கள். இவர்கள் கர்ம சன்யாசிகள், அகமும் புறமும், உடல் மற்றும் மனம் இரண்டையும் கொண்டு, கடவுள் பக்தியில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தன்னை உணர்ந்த ஞானிக்கு இரண்டு விருப்பங்களும் இருப்பதாக கூறுகிறார். அடுத்த வசனத்தில் அர்ஜுனனுக்கு அவர் எதை பரிந்துரைக்கிறார் என்று கூறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
3. கர்ம யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency