த1ஸ்மாத்1த்1வமின்த்3ரியாண்யாதௌ நியம்ய ப4ரத1ர்ஷப4 |
பா1ப்1மானம் ப்1ரஜஹி ஹ்யேனம் ஞானவிஞ்ஞானநாஶனம் ||41||
தஸ்மாத்——எனவே; த்வம்——நீ; இந்திரியாணி--—உணர்வுகள்; ஆதௌ——ஆரம்பத்தில்; நியம்ய--—கட்டுப்படுத்தப்பட்டு; பரத-ரிஷபா—பரதர்களில் சிறந்த அர்ஜுன்; பாப்மானம்——பாவம்; ப்ரஜஹி——கொல்; ஹி——நிச்சயமாக; ஏனம்—-இது; ஞான——அறிவு; விஞ்ஞான——உணர்தல்; நாஶனம்—அழிப்பது.
BG 3.41: ஆகவே, ஓ பரத வம்சத்தினரில் சிறந்தவனே, தொடக்கத்திலேயே புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாவத்தின் உருவமாகிய, அறிவையும் உணர்வையும் அழிக்கும் ஆசை என்ற இந்த எதிரியைக் கொன்றுவிடு.
இப்போது, மனித உணர்வுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடிய, எல்லாத் தீமைக்கும் வேரான காமத்தை எப்படி வெல்வது என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். காமத்தின் களஞ்சியங்களை குறித்து அடையாளம் காட்டிய ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம், புலன்களின் இச்சைகளை கட்டுப்படுத்தும்படி ஆரம்பத்தில் கேட்கிறார். அவைகளை எழ அனுமதிப்பது நமது துன்பங்களுக்குக் காரணம், அதே சமயம் அவற்றை நீக்குவதே அமைதிக்கான வழி.பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்.
ரமேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இரு சக மாணவர்கள் விடுதியில் ஒரே அறையை பகிர்ந்து கொண்டனர். இரவு 10 மணியளவில் ரமேஷுக்கு புகை பிடிக்கும் தூண்டுதல் ஏற்பட்டது. அவர் ‘எனக்கு புகை பிடித்தே ஆகவேண்டும்.’ என்று விடாப்பிடியாக கூறுகிறார்.
தினேஷ், ‘இவ்வளவு இரவு நேரமாகிவிட்டது. சிகரெட்டை மறந்துவிட்டு உறங்குங்கள்.’ என்று கூறுகிறார்.
‘இல்லை...இல்லை... புகை பிடிக்கும் வரை என்னால் தூங்க முடியாது’ என்று கூறி ரமேஷ். சிகரெட்டைத் தேடி வெளியே சென்றார்.
தினேஷ் தூங்கச் சென்றார். அருகில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைசியாக ரமேஷ் சிகரெட்டுடன் விடுதிக்குத் திரும்பி புகைபிடிப்பதற்கு இரண்டு மணிநேரம் பிடித்தது.
காலையில் தினேஷ் அவனிடம், ‘ரமேஷ், ராத்திரி எப்பொழுது தூங்கினாய்?’ என்று கேட்டான்.
‘நள்ளிரவில்" என்று கூறிய ரமேஷிடம்’ அப்படியா! அதாவது இரண்டு மணி நேரம் சிகரெட்டுக்காக கிளர்ந்தெழுந்து புகை பிடித்த பின் இரவு 10 மணிக்கு இருந்த அதே நிலைமைக்கு திரும்பி உறங்கி விட்டாய்,.
அதற்கு ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார் ரமேஷ்.
தினேஷ். ‘நீ இரவு 10 மணி வரை நிம்மதியாக புகை பிடிப்பதை பற்றி நினைக்காமல் இருந்தாய். இரவு 10 மணிக்கு மேல் புகை பிடிப்பதற்கான ஆசையை உன் மனதில் உருவாக்கி இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை, நீ சிகரெட்டுக்காக கிளர்ந்தெழுந்தாய். இறுதியாக, நீ புகைபிடித்தபோது, நீ உருவாக்கிய நோய், நீங்கி,. தூங்கி விட்டாய் மறுபுறம், நான் எந்த ஆசையையும் உருவாக்கவில்லை, இரவு 10 மணிக்கே நிம்மதியாக தூங்கினேன்.’ என்று கூறினார்
இவ்வாறாக, உடலின் புலன்களின் பொருள்களுக்கு ஆசைகளை உருவாக்குகிறோம், பின்னர் அவைகளால் கிளர்ச்சியடைகிறோம். நேசத்துக்குரிய பொருளைப் பெறும்போது, நம் சொந்தப் படைப்பின் நோய் நீங்கி, அதை மகிழ்ச்சியாக நினைக்கிறோம். இருப்பினும், நம்மை ஆன்மாவாகக் கருதி, நமது ஒரே நோக்கம் ஆன்மாவின் மகிழ்ச்சியாக இருந்தால், அத்தகைய பொருள் ஆசைகளைத் துறப்பது எளிதாகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வரச் சொல்கிறார், அதன் மூலம் அவற்றில் இருக்கும் காமத்தை அழிக்கிறார். இதை நிறைவேற்ற, அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, கடவுள் நமக்கு வழங்கிய உயர்ந்த கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்..
த1ஸ்மாத்1த்1வமின்த்3ரியாண்யாதௌ நியம்ய ப4ரத1ர்ஷப4 |
பா1ப்1மானம் ப்1ரஜஹி ஹ்யேனம் ஞானவிஞ்ஞானநாஶனம் ||41||
ஆகவே, ஓ பரத வம்சத்தினரில் சிறந்தவனே, தொடக்கத்திலேயே புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாவத்தின் உருவமாகிய, அறிவையும் உணர்வையும் அழிக்கும் ஆசை என்ற இந்த எதிரியைக் கொன்றுவிடு.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!