யுஞ்ஜன்னேவம் ஸதா3த்1மானம் யோகீ3 நியத1மானஸ: |

ஶான்தி3ம் நிர்வாணப1ரமாம் மத்1ஸன்ஸ்தா2மதி43ச்12தி1 ||15||

யுன்ஞன்—--மனதை கடவுளில் லயித்து வைத்து; ஏவம்--—இவ்வாறு; ஸதா--—தொடர்ந்து; ஆத்மானம்----மனம்; யோகீ--—ஒரு யோகி; நியத--மானஸஹ----ஒழுக்கமான மனதைக் கொண்டவராக; ஶாந்திம்—--அமைதியை; நிர்வாண—பொருள் பந்தத்திலிருந்து விடுதலை; பரமாம்--—உயர்ந்த; மத்-ஸன்ஸ்தாம்--—என்னில் நிலைத்திருக்கும் நிலை; அதிகச்சதி—--அடைகிறார்

అనువాదం

BG 6.15: இவ்வாறு, தொடர்ந்து மனதை என்னில் நிலைநிறுத்திக் கொண்டு, ஒழுக்கமான மனதைக் கொண்ட யோகி பொருள் பந்தத்திலிருந்து விடுதலை அடைந்து என்னில் எதினனுஞ் சிறந்த அமைதியுடன் வாழ்கிறார்.

వ్యాఖ్యానం

உலகில் பல்வேறு தியான நுட்பங்கள் உள்ளன. ஜென் நுட்பங்கள், புத்த நுட்பங்கள், தாந்த்ரீக நுட்பங்கள், தாவோயிஸ்ட் நுட்பங்கள், வேத நுட்பங்கள் மற்றும் பல உள்ளன. இவை ஒவ்வொன்றும் பல துணைக் கிளைகளைக் கொண்டுள்ளன. இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களிடையே எண்ணற்ற நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு இன்றியமையாத கேள்வி: இவற்றில் எதை நமது தனிப்பட்ட பயிற்சிக்காக நாம் பின்பற்ற வேண்டும்? ஸ்ரீகிருஷ்ணர் இந்தப் புதிரை எளிதாக தீர்க்கிறார். தியானத்தின் பொருள் கடவுள் மற்றும் கடவுளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

தியானத்தின் நோக்கம் செறிவு மற்றும் கவனத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மனதை தூய்மைப்படுத்துவதும் ஆகும். ஸ்வாஸம், சக்கரங்கள், சூன்யம், சுடர் மற்றும் பிற பொருட்களைப் பற்றிய தியானம் கவனத்தை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். இருப்பினும், மனதை தூய்மைப்படுத்துவதற்கு விலக்கில்லாத முழுமையான அனைத்து தூய்மையான கடவுளின் மீது மனதை நிலைநிறுத்தும்போது மட்டுமே சாத்தியமாகும். வசனம் 14.26 கூறுகிறது- கடவுள் ஜட இயற்கையின் மூன்று முறைகளுக்கு அப்பாற்பட்டவர், மேலும் ஒருவர் மனதை அவர் மீது நிலைநிறுத்தும்போது, ​​அதுவும் மூன்று முறைகளுக்கு மேலாக உயர்கிறது. எனவே, பிராணன்களின் மீது தியானம் செய்வது அதன் பயிற்சியாளர்களால் ஆழ்நிலை என்று அழைக்கப்படலாம், உண்மையான ஆழ்நிலை தியானம் கடவுள் மீது மட்டுமே உள்ளது.

ஏதேனும் ஒன்றைத் தியானித்து, கடவுளைத் தியானிப்பதன் உண்மையான பலனைப் பெறலாம். இந்தியாவில் உள்ள பல்வேறு பக்தி மரபுகளில், கடவுளின் பெயர் சிந்தனையின் அடிப்படையாக உள்ளது. ராமாயணம் கூறுகிறது:

ப்3ரஹ்ம ராம் தே1 நாமு ப34 , ப34 தா334 தா3னி

'ஆன்மாக்களுக்குப் பயன்படும் வகையில் கடவுளின் பெயர் கடவுளை விடப் பெரியது.' அவருடைய பெயரை உச்சரிப்பது கடவுளை நினைவுகூருவதற்கு மிகவும் வசதியான வழியாகும், ஏனெனில் அது எங்கும் எல்லா இடத்திலும் - நடக்கும்போதும், பேசும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும், சாப்பிடும்போதும், வேறு எந்த இடத்திலும்,மற்றும் எந்தவிதமான செயல்பாடுகளை செய்யும் போதும் நினைவு கூறலாம்.

இருப்பினும், பெரும்பாலான ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு ,அவரது பெயர்கள் ஒன்றே மனதை மயக்கும் அளவுக்கு கவர்ச்சிகரமானதாக இல்லை. முடிவில்லா வாழ்வின் ஸ்ம்ஸ்காரங்களால், மனம் இயற்கையாகவே வடிவங்களுக்கு இழுக்கப்படுகிறது. கடவுளின் வடிவத்தை தியானத்திற்கு பயன்படுத்துவது எளிதான மற்றும் இயல்பானது இது ரூபத்யான் தியானம் என்று அழைக்கப்படுகிறது.

கடவுளின் வடிவத்தில் மனதை ஒருமுகப்படுத்தியவுடன், கடவுளின் நற்பண்புகளை-அவரது இரக்கம், அவரது அழகு, அவரது அறிவு, அவரது அன்பு, மற்றும் அவரது கருணை, ஆகியவற்றைப் பற்றி சிந்திப்பதன் மூலம் அதை மேலும் மேம்படுத்தலாம். மனதிற்குள் கடவுளுக்கு சேவை செய்வதன் மூலம் ஒருவர் தியானத்தில் முன்னேறலாம். அவருக்கு உணவுப் பொருட்களை வழங்குவது, அவரை வணங்குவது, விசிறியால் விசிறிவது ,அவரைக் குளிப்பாட்டுவது அவருக்காக பாடுவது அவருக்காக சமைப்பது மற்றும் பிற சேவைகளை நாம் கற்பனை செய்யலாம். இது மானஸீ ஸேவா (மனதில் கடவுளுக்கு சேவை செய்தல்) என்று அழைக்கப்படுகிறது. இந்த வழியில், நாம் கடவுளின் பெயர்கள், வடிவங்கள், நற்பண்புகள், பொழுது போக்குகள், இருப்பிடங்கள் மற்றும் கூட்டாளிகளை தியானிக்க முடியும். இவையனைத்தும் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரையை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த வழிமுறைகளாக மாறி, மனதை அவரில் லயிக்க வைக்கின்றன.

வசனத்தின் முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர் தியானத்தின் இறுதிப் பலன்களைத் தருகிறார், அவை மாயாவிலிருந்து விடுதலை மற்றும் கடவுள்-உணர்வின் நித்திய பேரன்பு.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency