ப்1ரஶான்த1மனஸம் ஹ்யேனம் யோகி3னம் ஸுக2முத்1த1மம் |
உபை1தி ஶான்த1ரஜஸம் ப்3ரஹ்மபூ4த1மக1ல்மஷம் ||27||
ப்ரஶாந்த—--அமைதியான; மனஸம்—--மனம்; ஹி—--நிச்சயமாக; ஏனம்—--இந்த; யோகிநம்—--யோகி; ஸுகம் உத்தமம்--—உயர்ந்த ஆனந்தம்; உபைதி--—அடைகிறது; ஶாந்த-ரஜஸம்---—யாருடைய உணர்ச்சிகள் அடக்கப்படுகின்றன; ப்ரஹ்ம-பூதம்--—கடவுளை உணர்தல் உடையது; அகல்மஷம்--—பாவம் இல்லாதது
BG 6.27: எந்த யோகியின் மனம் அமைதியடைகிறதோ, யாருடைய மோகங்கள் அடங்கிப் போகின்றனவோ, பாவம் இல்லாதவனாக, எல்லாவற்றையும் கடவுளோடு தொடர்புபடுத்திப் பார்க்கிற யோகிக்கு பெரும் ஆழ்நிலை மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ஒரு யோகி, புலன் பொருள்களிலிருந்து மனதை விலக்கி, கடவுளின் மீது பிடி நழுவாமல் பயிற்சியை முழுமைப்படுத்தும் போது, உணர்ச்சிகள் அடங்கி, மனம் முற்றிலும் அமைதியடைகிறது. முன்னதாக, கடவுளின் மீது கவனம் செலுத்த முயற்சி தேவைப்பட்டது, ஆனால் இப்போது அது இயல்பாகவே அவரிடம் செல்கிறது. இந்த நிலையில், உயர்ந்த தியானம் செய்பவர் எல்லாவற்றையும் கடவுளுடன் தொடர்பு உடையதாகக் கொள்கிறார் . நாரத முனிவர் கூறுகிறார்:
த1த் ப்1ராப்1ய த1த்3 ஏவாவலோக1யதி1, த1த்3 ஏவ ஸ்ருணோதி1,
த1த்3 ஏவ பா4ஷயதி1, த1த்3 ஏவ சிந்த1யதி1
(நாரத்3 ப4க்1தி1 த3ர்ஶன் ஸூத்1ரம் 55)
'எப்பொழுதும் கடவுளின் அன்பில் இணைந்து இருக்கும் பக்தனின் உணர்வு எப்போதும் அவரில் ஈடுபட்டுள்ளது; அத்தகைய பக்தன் எப்போதும் அவரைப் பார்க்கிறான், கேட்கிறான், பேசுகிறான், அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறான்.' இந்த முறையில் மனம் இறைவனில் லயிக்கும்போது, உள்ளத்தில் அமர்ந்திருக்கும் கடவுளின் எல்லையற்ற பேரின்பத்தை ஆன்மா அனுபவிக்கத் தொடங்குகிறது.
ஆன்மீகப் பயிற்சியில் தாங்கள் முன்னேறி வருவதை எவ்வாறு அறிந்து கொள்வது என்று ஆன்மீகப் பயிற்சியாளர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அதற்கான பதில் இந்த வசனத்தில் பொதிந்துள்ளது. நமது உள்ளார்ந்த பேரின்பம் அதிகரித்து வருவதைக் கண்டால், நம் மனம் கட்டுப்பாட்டிற்குள் வருவதையும், உணர்வு ஆன்மீக ரீதியில் உயர்ந்து வருவதையும் அடையாளமாகக் கருதலாம். நாம் ஆவேசத்தில் இருந்து விடுபட்ட பாவம் அற்றவர்களாக ஆகும்போது கடவுள் உணர்தலை பெற்றவர் ஆகிறோம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அந்த நிலையில், நாம் உயர்ந்த பேரின்பத்தை அனுபவிப்போம்.
ப்1ரஶான்த1மனஸம் ஹ்யேனம் யோகி3னம் ஸுக2முத்1த1மம் |
உபை1தி ஶான்த1ரஜஸம் ப்3ரஹ்மபூ4த1மக1ல்மஷம் ||27||
எந்த யோகியின் மனம் அமைதியடைகிறதோ, யாருடைய மோகங்கள் அடங்கிப் போகின்றனவோ, பாவம் இல்லாதவனாக, எல்லாவற்றையும் கடவுளோடு தொடர்புபடுத்திப் பார்க்கிற யோகிக்கு பெரும் ஆழ்நிலை மகிழ்ச்சி ஏற்படுகிறது.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!