ஆருருக்ஷோர்முனேர்யோக3ம் க1ர்ம கா1ரணமுச்1யதே1 |

யோகா3ரூட4ஸ்ய த1ஸ்யைவ ஶம: கா1ரணமுச்1யதே1 || 3 ||

ஆருருக்ஷோஹோ--—ஒரு தொடக்கநிலையிலுள்ள; முனேஹ--—ஒரு முனிவரின்; யோகம்—யோகம்; கர்ம--—பற்று இல்லாமல் வேலை செய்தல்; காரணம்—-காரணம்; உச்யதே--—என்று கூறப்படுகிறது; யோக ஆருடஸ்ய--—யோகத்தில் உயர்ந்தவர்களான; தஸ்ய—--அவர்களின்; ஏவ—--நிச்சயமாக; ஶமஹ--—தியானம்; காரணம்--— காரணம்; உச்யதே---என்று கூறப்படுகிறது

అనువాదం

BG 6.3: யோகத்தில் முழுமை பெற விரும்பும் ஆன்மாவுக்கு, பற்றற்ற வேலையே வழி என்று கூறப்படுகிறது; ஏற்கனவே யோகத்தில் மேலோங்கி விளங்கும் முனிவருக்கு, தியானத்தின் அமைதியே வழி என்று கூறப்படுகிறது.

వ్యాఖ్యానం

அத்தியாயம் 3, வசனம் 3 இல், ஸ்ரீ கிருஷ்ணர் நலன்களை அடைவதற்கு இரண்டு பாதைகள் உள்ளன என்று குறிப்பிட்டார்-- சிந்தனை மற்றும் செயல் பாதை. இவற்றுக்கு இடையே, அவர் அர்ஜுனனிடம் நடவடிக்கையின் பாதையைப் பின்பற்றுமாறு பரிந்துரைத்தார். மீண்டும், அத்தியாயம் 5, வசனம் 2, இல் அவர் அதை சிறந்த பாதை என்று அறிவித்தார். நம் வாழ்நாள் முழுவதும் நாம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இப்படிப்பட்ட ஒரு கேள்வியை எதிர்பார்த்து, ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கான வரம்புகளை அமைக்கிறார். நாம் கர்ம யோகத்தைச் செய்யும்போது, ​​அது மனதைத் தூய்மைப்படுத்தவும், ஆன்மீக அறிவைப் பக்குவப்படுத்தவும் வழிவகுக்கிறது. ஆனால் மனம் தூய்மையடைந்து யோகத்தில் முன்னேறிவிட்டால், நாம் கர்ம யோகத்தை விட்டுவிட்டு கர்ம ஸன்யாஸத்திற்கு செல்லலாம். இந்த கட்டத்தில், பொருள் நடவடிக்கைகள் எந்த நோக்கத்தையும் அளிக்காது, மேலும் தியானம் வழிமுறையாகிறது.

எனவே, நாம் பின்பற்ற வேண்டிய பாதை, நமது தகுதியின் பிரதிபலிப்பு ஆகிறது, மேலும் இந்த வசனத்தில் தகுதிக்கான அளவுகோல்களை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். யோகத்தை விரும்புபவர்களுக்கு, கர்ம யோகத்தின் பாதை மிகவும் பொருத்தமானது; யோக் என்ற சொல் இலக்கு மற்றும் இலக்கை அடைவதற்கான செயல்முறை இரண்டையும் குறிக்கிறது.. அதையே குறிக்கோளாகப் பேசும்போது, ​​‘கடவுளுடன் ஐக்கியம்’ என்று பொருள்பட யோக் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். யோக்3 என்ற சொல்லைப செயல்முறையாக குறிப்பிடும் போது அதை கடவுளுடன் ஒன்று இணைவதற்கான பாதை என்று அறிகிறோம்.

இந்த இரண்டாவது சூழலில், யோகம் என்பது கடவுளை அடைய நாம் ஏறும் ஏணி போன்றது. மிகக் குறைந்த மட்டத்தில், ஆன்மா இவ்வுலக விஷயங்களில் மூழ்கியிருக்கும் உணர்வுடன் இவ்வுலக வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறது. யோகத்தின் ஏணி ஆன்மாவை அந்த நிலையிலிருந்து தெய்வீக உணர்வு உறிஞ்சப்படும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. ஏணியின் பல்வேறு படிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன, ஆனால் யோகம் அனைவருக்கும் பொதுவான ஒரு சொல். யோக-ஆருருக்ஷு என்பவர்கள், கடவுளுடன் இணைவதற்கு ஆசைப்பட்டு, இப்போது ஏணியில் ஏறத் தொடங்கிய பயிற்சியாளர்கள் (ஸாதகர்கள்).. யோக-ஆரூட ஸாதகர்கள் / பயிற்சியாளர்கள் ஏணியில் உயர்ந்தவர்கள்.

அப்படியானால், யோக அறிவியலில் ஒருவர் உயர்ந்தவர் என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? ஸ்ரீ கிருஷ்ணர் இதை அடுத்து விளக்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency