ப்1ராப்1ய பு1ண்யக்ருதா1ம் லோகானுஷித்1வா ஶாஶ்வதீ1: ஸமா: |

ஶுசீ1னாம் ஶ்ரீமதா1ம் கே3ஹே யோக3ப்4ரஷ்டோ1‌பி4ஜாயதே1 ||41||
அத2வா யோகி3னாமேவ கு1லே ப4வதி1 தீ4மதா1ம் |

ஏத1த்3தி4 து3ர்லப41ரம் லோகே1 ஜன்ம யதீ3த்3ருஶம் ||42||

ப்ராப்ய—--அடைந்து; புண்ய-க்ருதம்—--நற்குணமுள்ளவர்களுடைய; லோகான்—--தங்குமிடங்களில்; உஷித்வா---வசித்த பிறகு; ஶாஶ்வதிஹி---பல; ஸமாஹா--—காலங்கள்; ஶுசீனாம்—பக்தியுள்ளவர்களின்; ஶ்ரீ-மதாம்--செழிப்பானவர்களின்; கேஹே—-வீட்டில்; யோக-பிரஷ்டாஹா—--தோல்வி அடைந்தத யோகிகள்; அபிஜாயதே--—--பிறவி எடுப்பர்; அதவா—--அல்லது; யோகினாம்—--தெய்வீக ஞானம் பெற்றவர்களின்; ஏவ—--நிச்சயமாக; குலே--—குடும்பத்தில்; பவதி—--பிறவி எடுப்பர்; தீமதாம்--—ஞானிகளின்; ஏதத்---இது; ஹி-- நிச்சயமாக; துர்லப-தரம்---மிகவும் அரிது; லோகே—--இந்த உலகில்; ஜன்ம—--பிறப்பு; யத்—--எது; ஈத்ரிஷம்--—இப்படி

అనువాదం

BG 6.41-42: தோல்வியுற்ற யோகிகள், இறந்தவுடன், நல்லொழுக்கமுள்ளவர்களின் இருப்பிடங்களுக்குச் செல்கிறார்கள். பல யுகங்கள் அங்கு வசித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமியில், பக்தியுள்ள மற்றும் செழிப்பான மக்கள் குடும்பத்தில் மீண்டும் பிறக்கிறார்கள். இல்லையெனில், அவர்கள் நீண்ட காலமாக யோகப் பயிற்சியின் காரணமாக நடுநிலை உணர்வை வளர்த்துக் கொண்டால், அவர்கள் தெய்வீக ஞானம் கொண்ட குடும்பத்தில் பிறக்கிறார்கள். இவ்வுலகில் இத்தகைய பிறவி பெறுவது மிகவும் கடினம்.

వ్యాఖ్యానం

தேவலோக வாசஸ்தலங்களில் வசிப்பது என்பது வேதங்கள் விதித்துள்ள உலகியல் நற்பண்புகள் மற்றும் பலனளிக்கும் வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளில்- செயல் முறைப்பாடுகளில் (கர்ம- காண்டத்தில்) ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்படியானால், தோல்வியுற்ற யோகி ஏன் தேவலோக வாசஸ்தலங்க்குச் செல்ல வேண்டும்? காரணம், யோக் (கடவுளுடன் ஐக்கியம்) என்பது போக் (பொருள் இன்பம்) என்பதற்கு எதிரானது. பொருள் இன்பத்தின் காரணமாக ஒருவர் யோகத்திலிருந்து விழுகிறார். கடவுள், ஒரு தந்தையைப் போல, அந்த விழுந்த யோகிக்கு அடுத்த ஜென்மத்தில் ஜட பொருட்களின் இன்பங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறார், மேலும் வீழ்ந்த யோகி இது நிரந்தரமான பேரின்பத்திற்கான ஆன்மாவின் ஏக்கத்தைத் தீர்க்க பயனற்றது என்பதை உணருகிறார். எனவே, வீழ்ந்த யோகி சில சமயங்களில் தேவலோக வாஸஸ்தலங்களுக்கு அனுப்பப்படுகிறார், பின்னர் மீண்டும் பூமியில் பிறக்கிறார்.

அத்தகைய ஆன்மாக்கள் ஆன்மீக பயணத்தைத் அவர்கள் தொடர வாய்ப்புள்ள ஒரு குடும்பத்தில் பிறக்கப்படுகின்றன. ஶுசீ1 என்றால் பக்தி மற்றும் நல்ல குணம் கொண்டவர்கள்; ஸ்ரீ என்றால் செல்வந்தர்கள் என்று பொருள். தோல்வியுற்ற யோகிகள், குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தையின் ஆன்மீகத்தை வளர்க்கும் ஒரு பக்தியுள்ள குடும்பத்தில், அல்லது அனைத்து பொருள் தேவைகளும் கவனிக்கப்பட்டு, ஒருவர் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபடத் தேவையில்லாத ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் பிறக்கிறார்கள். .இத்தகைய குடும்பச் சூழல், மிகவும் விருப்பமுள்ள ஆன்மாக்களுக்கு ஆன்மீகத் தேடலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை எளிதாக்குகிறது.

நாம் பிறந்த சூழ்நிலைகள், மற்றும் குடும்பம் ஆகியவை நம் வாழ்வின் போக்கில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது உடலைச் சார்ந்த பெற்றோரிடமிருந்து, நாம் பரம்பரை பண்புகளைப் பெறுகிறோம். இது பரம்பரையின் மரபணு செயல்முறை. இருப்பினும், சமூக மரபுவழி செயல்முறையும் உள்ளது. நாம் வளரும் சமூக சூழ்நிலையைப் பொருத்தும் பழக்கவழக்கங்களை மறைமுகமாக பின்பற்றுகிறோம். நாம் இந்தியர்களாகவோ, அமெரிக்கர்களாகவோ, பிரித்தானியர்களாகவோ அல்லது பிற தேசிய இனத்தவர்களாகவோ பிறக்க தேர்ந்தெடுப்பதில்லை. நாம் பிறப்பின் அடிப்படையில் ஒரு தேசியத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம், மேலும் பிற இனத்தவர்களுடன் பகையை வளர்க்கும் அளவிற்கு செல்கிறோம். எப்பொழுதும் சமூகப் பரம்பரையின் அடிப்படையில் நாம் நமது பெற்றோரின் மதத்தைப் பின்பற்றுகிறோம்.

எனவே, நாம் பிறந்த இடம் மற்றும் குடும்பம் நமது வாழ்க்கையின் திசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வாழ்க்கையிலும் பிறந்த இடம் மற்றும் குடும்பம் தன்னிச்சையாக தீர்மானிக்கப்பட்டால், உலகில் நீதி இல்லை. இருப்பினும், எண்ணற்ற வாழ் நாட்களின் அனைத்து எண்ணங்கள் மற்றும் செயல்களின் கணக்கு கடவுளிடம் உள்ளது. நம் செயல்களின் விதியின்படி, முந்தைய வாழ்க்கையில் தோல்வியுற்ற யோகி சம்பாதித்த ஆன்மீக சொத்துக்கள் பலனைத் தருகின்றன. அதன்படி, வெகுதூரம் கடந்து, மனச்சாட்சியை வளர்த்துக் கொண்ட அந்த யோகிகளை தேவலோகத்திற்கு அனுப்புவதில்லை. அவர்களின் பயணத்தின் தொடர்ச்சியை எளிதாக்குவதற்காக அவர்கள் ஆன்மீக ரீதியாக வளர்ந்த குடும்பத்தில் பிறக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைக்கு தெய்வீக ஞானத்தை ஆரம்பத்திலிருந்தே புகுத்துவதால், சுகப் பிறப்பு ஒரு பெரிய அதிர்ஷ்டமாகும்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency