3ஹூனாம் ஜன்மனாமன்தே1 ஞானவான்மாம் ப்1ரப1த்3யதே1 |

வாஸுதே3வ: ஸர்வமிதி1 ஸ மஹாத்1மா ஸுது3ர்லப4: ||
19 ||

பஹூனாம்--—பல; ஜன்மனாம்--—பிறப்புகள்; அன்தே--—பின்; ஞான-வான்—--அறிவு பெற்றவன்; மாம்--—எனக்கு; ப்ரபத்யதே--—சரணாகதி; வாஸுதேவஹ---வஸுதேவரின் மகன் ஸ்ரீ கிருஷ்ணர்; ஸர்வம்—--அனைத்தும்; இதி—--அந்த; ஸஹ--—-அந்த; மஹா-ஆத்மா—--பெரிய ஆன்மா ஸு-துர்லபஹா--—மிகவும் அரிது

అనువాదం

BG 7.19: ஆன்மிகப் பயிற்சியின் பல பிறவிகளுக்குப் பிறகு, ஞானம் பெற்ற ஒருவன், நான் தான் அனைத்து என்று அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய பெரிய ஆன்மா உண்மையில் மிகவும் அரிதானது.

వ్యాఖ్యానం

இந்த வசனம் ஒரு பொதுவான தவறான கருத்தை தெளிவுபடுத்துகிறது. பெரும்பாலும் அறிவார்ந்த நாட்டம் கொண்டவர்கள் பக்தியை ஞானத்தை (அறிவை) விட தாழ்ந்ததுஎன்று ஏளனம் செய்கிறார்கள். அறிவை வளர்ப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள், பக்தியில் ஈடுபடுபவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள். இருப்பினும், இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் தலைகீழாகக் கூறுகிறார். பல உயிர்களுக்கு ஞானத்தை வளர்த்த பிறகு, ஞானியின் அறிவு முதிர்ந்த நிலையை அடையும் போது, ​​அவன் அல்லது அவள் இறுதியாக கடவுளிடம் சரணடைகிறார் என்று கூறுகிறார்.

உண்மையான அறிவு இயற்கையாகவே பக்திக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை. ஒரு நபர் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார் என்று வைத்துக்கொள்வோம், அவர் மணலில் ஒரு மோதிரத்தைக் கண்டார். அதை எடுத்த, அவர் அதன் மதிப்பை அறிந்திருக்கவில்லை. அது முந்நூறு ரூபாய் மதிப்புள்ள மிகவும் பரவலான செயற்கை நகை என்று நினைத்தார்.

மறுநாள், அந்த மோதிரத்தை ஒரு பொற்கொல்லரிடம் காட்டி, ‘இந்த இந்த மோதிரத்தை மதிப்பிட முடியுமா?’ என்று கேட்டார்.

பொற்கொல்லர் அதைச் சரிபார்த்து, 'இது 22 காரட் தங்கம். அதன் மதிப்பு முப்பதாயிரம் ரூபாய் இருக்கும்.’என்று கூறினார்.

இதைக் கேட்டதும் அந்த நபருக்கு மோதிரம் மீதான பற்று அதிகரித்தது. இப்போது அந்த மோதிரத்தைப் பார்த்து, ​​முப்பதாயிரம் ரூபாய் பரிசாகப் பெற்றதில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறாரோ அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்.

இன்னும் சில நாட்கள் செல்ல, நகை வியாபாரியான அவனுடைய மாமா வேறு ஊரிலிருந்து வந்தார். அவர் தனது மாமாவிடம், ‘இந்த மோதிரத்தையும் அதில் பதிக்கப்பட்ட கல்லையும் மதிப்பீடு செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.

அவனுடைய மாமா அதைப் பார்த்து, 'இதை எங்கிருந்து பெற்றாய்? இது ஒரு உண்மையான வைரம். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்க வேண்டும்’. ’என்று கூறினார்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு. ‘மாமா, தயவு செய்து என்னுடன் கேலி செய்யாதீர்கள்.'என்று கூறினார்.

நான் கேலி செய்யவில்லை மகனே நம்பவில்லை என்றால் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு எனக்கு விற்றுவிடு" என்று கூறினார்.

இப்போது, ​​மோதிரத்தின் உண்மையான மதிப்பு பற்றிய அவரது அறிவு உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக, மோதிரத்தின் மீதான அவரது பற்று இன்னும் அதிகரித்தது. அவர் ஜாக்பாட் வென்றதாக உணர்ந்தார், மேலும் அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அந்த நபரின் மோதிரத்தின் மீதான காதல் அவரது அறிவின் விகிதத்தில் எவ்வாறு அதிகரித்து வந்தது என்பதை கவனத்தில் கொள்ளவும். அந்த மோதிரத்தின் மதிப்பு முந்நூறு ரூபாய் என்று அவன் அறிந்தபோது, ​​அந்த மோதிரத்தின் மதிப்பு முப்பதாயிரம் ரூபாய் என்பது அவனுக்குத் தெரிந்தபோது, ​​அந்த மோதிரத்தின் மீதான பற்று நூறு மடங்கு அதிகரித்தது. அந்த மோதிரத்தின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்று, தெரிந்தபோது ​​​​அவரது பற்று அதிவேகமாக வளர்ந்தது.

மேலே உள்ள உதாரணம், அறிவுக்கும் அன்புக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பை விளக்குகிறது. ராமாயணம் கூறுகிறது:

ஜானே பி3னு ந ஹோய ப1ரதீ1தீ1, பி3னு ப1ரதீ1தீ1 ஹோயி நஹி ப்1ரீதீ1

'அறிவு இல்லாமல், நம்பிக்கை இருக்க முடியாது; நம்பிக்கை இல்லாமல், அன்பு வளர முடியாது.’ இவ்வாறு, உண்மையான அறிவு இயல்பாகவே அன்புடன் சேர்ந்துள்ளது. ப்ரஹ்மனைப் பற்றிய அறிவு நம்மிடம் இருப்பதாகக் கூறினால், ஆனால் அவர் மீது அன்பு இல்லை என்றால், நமது அறிவு வெறும் தத்துவார்த்தமானது.

இங்கே, பல வாழ்நாள் அறிவை வளர்த்த பிறகு, அந்த ஞானியின் அறிவு உண்மையான ஞானமாக முதிர்ச்சியடையும் போது, ​​அவர் பரமாத்மாவிடம் சரணடைகிறார், அவரே எல்லாமாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார், இத்தகைய உன்னத ஆன்மா மிகவும் அரிது என்று இந்த வசனம் கூறுகிறது. இதை அவர் ஞானிகள், செயல்பாடுகளை செய்பவர், ஹட யோகிகள், துறவிகள் அல்லது மற்றவர்களுக்காகச் சொல்லவில்லை. அதை பக்தருக்காக அறிவித்து, ‘எல்லாம் கடவுள்’ என்பதை உணர்ந்து அவரிடம் சரணடையும் உன்னத ஆன்மா மிகவும் அரிது என்று கூறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
7. ஞான விஞ்ஞான யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency