ஸஞ்ஜய உவாச1 |
ஏ1தச்1ச்2ருத்1வா வச1னம் கே1ஶவஸ்ய
க்1ருதா1ஞ்ஜலிர்வேப1மான: கி1ரீடீ2 |
நமஸ்க்1ருத்1வா பூ4ய ஏவாஹ க்1ருஷ்ணம்
ஸக3த்3க3த3ம் பீ4த1பீ4த1: ப்1ரணம்ய ||35||
ஸஞ்ஜய உவாச---—ஸஞ்ஜயன் கூறினார்; ஏதத்--—இவ்வாறு; ஶ்ருத்வா—--கேட்டபின்; வசனம்--—வார்த்தைகளை; கேஶவஸ்ய--—ஸ்ரீ கிருஷ்ணரின்; கிருத-அஞ்சலிஹி----இணைந்த உள்ளங்கைகளுடன்; வேபமானஹ--—நடுங்கி;கிரீடீ—--முடி சூடிய, அர்ஜுனன்; நமஸ்கிருத்வா—--இணைந்த உள்ளங்கைகளுடன்; பூயஹ--—மீண்டும்; ஏவ--—உண்மையில்; ஆஹ—--பேசினார்; கிருக்ஷ்ணம்—--ஸ்ரீ கிருஷ்ணரிடம்; ஸ-கத்கதம்—--குரலில் தடுமாற்றத்ல்; பீத—பீதஹ---பயத்தில் மூழ்கி; ப்ரணம்ய—---குனிந்து
BG 11.35: ஸஞ்ஜயன் கூறினார் கேசவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் நடுங்கி உள்ளங்கைகளை இணைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி பயத்தில் மூழ்கி குரலில் தடுமாற்றத்துடன் பேசினார்.
இங்கு அர்ஜுனன் ‘கிரீடம் அணிந்தவர்’ என்று குறிப்பிடப்படுகிறார். அவர் ஒருமுறை இந்திரனுக்கு இரண்டு அரக்கர்களைக் கொல்ல உதவினார். தனது மகிழ்ச்சிக்கு அடையாளமாக, இந்திரன் அவரது தலையில் பிரமிக்க வைக்கும் கிரீடத்தை வைத்தார். இந்த வசனத்தில், ஸஞ்ஜயன் அர்ஜுனனின் தலையில் இருக்கும் கிரீடத்தை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் ஒரு கிரீடம் முடியாட்சியின் சின்னமாகும், மேலும் வரவிருக்கும் போரில் அவரது மகன்களான கௌரவர்கள், பாண்டவர்களிடம் அரியணையை இழப்பார்கள் என்று வயதான மன்னன் திருதராஷ்டிரனுக்கு சூசகமாக ஸஞ்ஜயன் இந்த வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகிறார்.
ஸஞ்ஜய உவாச1 |
ஏ1தச்1ச்2ருத்1வா வச1னம் கே1ஶவஸ்ய
க்1ருதா1ஞ்ஜலிர்வேப1மான: கி1ரீடீ2 |
நமஸ்க்1ருத்1வா பூ4ய ஏவாஹ க்1ருஷ்ணம்
ஸக3த்3க3த3ம் பீ4த1பீ4த1: ப்1ரணம்ய ||35||
ஸஞ்ஜயன் கூறினார் கேசவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் நடுங்கி உள்ளங்கைகளை இணைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி பயத்தில் மூழ்கி குரலில் தடுமாற்றத்துடன் பேசினார்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!