1மேவ ஶரணம் க3ச்12 ஸர்வபா4வேன பா4ரத1 |

1த்1ப்1ரஸாதா3த்11ராம் ஶாந்தி1ம் ஸ்தா2னம் ப்1ராப்1ஸ்யஸி ஶாஶ்வத1ம் ||62||

தம்--—அவரிடம்; ஏவ--— பிரத்தியேகமாக; ஶரணம் கச்ச--—சரணடைந்து விடு;சர்வ-பாவேனா--—முழு மனதுடன்; பரத--—அர்ஜுனன் பரதரின் மகன்; தத்-ப்ரஸாதாத்--—அவருடைய அருளால்; பராம்—உயர்ந்த; ஶாந்திம்— அமைதியையும்; ஸ்தானம்--—இருப்பிடத்தையும்; ப்ராப்ஸ்யஸி--—நீ அடைவாய்; ஶாஶ்வதம்--—நித்தியமான

అనువాదం

BG 18.62: ஓ பரத வம்சத்தில் தோன்றியவனே உன் முழு இருத்தல் உடன் அவரிடம் பிரத்தியேகமாகச் சரணடைந்து விடு. அவருடைய அருளால், நீ பூரண அமைதியையும் நித்திய இருப்பிடத்தையும் அடைவாய்.

వ్యాఖ్యానం

கடவுளைச் சார்ந்திருப்பதால், ஆன்மா தனது தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து விடுபட்டு இறுதி இலக்கை அடைய அவரது அருளையும் சார்ந்திருக்க வேண்டும். இதற்கு சுயமுயற்சி ஒருபோதும் போதாது. ஆனால் கடவுள் தனது அருளை வழங்கினால், அவர் தனது தெய்வீக அறிவையும் தெய்வீக பேரின்பத்தையும் ஆன்மாவிற்கு அளித்து, பொருள் ஆற்றலின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர், அவருடைய அருளால், ஒருவர் நிரந்தரமான பேரன்பையும், அழியாத இருப்பிடத்தையும் அடைவார் என்று வலியுறுத்துகிறார். ஒரு உலகத் தந்தை கூட அவரது விலைமதிப்பற்ற உடைமைகளை தனது குழந்தை அவற்றை சரியாகப் பயன்படுத்த பொறுப்பாகும் வரை ஒப்படைக்க மாட்டார். அதுபோலவே, கடவுளின் அருள் என்பது விசித்திரமான செயல் அல்ல; அவர் முற்றிலும் பகுத்தறிவு விதிகளைக் கொண்டுள்ளார், அதன் அடிப்படையில் வழங்குகிறார்

கடவுள் அருளும் போது விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர் மீது மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும் விடும். உதாரணமாக, ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சாகுபடி பருவம் என்பதால் இருவரையும் நெல் வயலில் கடுமையாக உழைக்குமாறு அறிவுறுத்துகிறார். ஒரு மகன் நாள் முழுவதும் வெயிலில் உழைக்கிறான். இரவில் திரும்பி வரும்போது தந்தை கூறுகிறார், நன்று, என் மகனே. நீ கீழ்ப்படிதலுள்ளவன், கடின உழைப்பாளி, விசுவாசமுள்ளவன். இதோ உன் வெகுமதி. 1,000 ரூபாயை எடுத்துக்கொண்டு, அதில் உனக்குப் பிடித்ததைச் செய்ய’ என்றார். இரண்டாவது மகன் ஒன்றும் செய்யவில்லை-அவன் நாள் முழுவதும் படுக்கையில் படுத்து தூங்குகிறான், குடித்து, புகைபிடித்து, தன் தந்தையை துஷ்பிரயோகம் செய்கிறான். அவர் அந்த மகனுக்கும் 'பரவாயில்லை நீயும் என் மகன்தான் இதோ நீயும் சென்று அதை அனுபவி'என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்றால் முதல் மகனின் உழைப்பதற்கான உந்துதல் நசுக்கப்படும். அவர் சொல்வார், 'இது என் தந்தையின் வெகுமதி முறை என்றால், நான் ஏன் வேலை செய்ய வேண்டும்? நானும் ஒன்றும் செய்யமாட்டேன், ஏனென்றால் நான் எப்படியும் 1,000 ரூபாயைப் பெறுவேன்.’ அதுபோல, கடவுள் நமக்குத் தகுதியில்லாமல் அவருடைய கிருபையை அளித்தால், கடந்த காலத்தில் புனிதர்களாக மாறியவர்கள் அனைவரும், ‘என்ன இது? பல வாழ்நாள் முழுவதும் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள பாடுபட்டோம், பிறகு கடவுளின் அருளைப் பெற்றவர்களாக ஆனோம், ஆனால் இந்த நபர் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல் அதைப் பெற்றார். பின்னர் சுய முன்னேற்றத்திற்கான எங்கள் முயற்சி அர்த்தமற்றது.’ என்று புகார் கூறுவார்கள். கடவுள் கூறுகிறார், 'நான் இந்த பகுத்தறிவற்ற முறையில் நடந்து கொள்வதில்லை. எனக்கு ஒரு நித்திய நிலை உள்ளது, அதன் அடிப்படையில் நான் என் அருளை வழங்குகிறேன். மேலும் இதை நான் எல்லா ஶாஸ்திரங்களிலும் அறிவித்துள்ளேன்.’ ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் கூறுகிறது:

யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி1 பு1ர்வம்

யோ வை வேதா3ஞ்ச் ச1 ப்1ரஹிணோதி11ஸ்மை

1ம் ஹ தே3வம் ஆத்1ம-புத்4தி3- ப்1ரகா1ஶம்

முமுக்ஷுர் வை ஶரணம் அஹம் ப்1ரப1த்4யே (6.18)

‘பிரம்மாவையும் பிறரையும் படைத்த அந்த உன்னதமானவரிடம் நாங்கள் அடைக்கலம் அடைகிறோம். அவருடைய அருளால் ஆன்மாவும் புத்தியும் ஒளிர்கின்றன.’ ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

மாம் ஏக1ம் ஏவ ஶரணம் ஆத்1மானம் ஸர்வ-தே1ஹினாம்

யாஹி ஸர்வாத்1ம-பா4வேன மயா ஸ்யா ஹை அகு1தோ1-ப4யஹ (11.12.15)

‘ஓ உத்தவ்! அனைத்து வகையான இவ்வுலக வாழ்க்கைக்குரிய சமூக மற்றும் மத மரபுளையும் கைவிட்டு, எல்லா ஆத்மாக்களின் பரம ஆத்மாவாகிய என்னிடம் சரணடைந்து விடு. அப்போதுதான் நீ இந்த ஜடப் பெருங்கடலைக் கடந்து அச்சமின்றி இருக்க முடியும்.’

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையின் 7.14 வது வசனத்திலும் கூறினார்: 'இயற்கையின் மூன்று முறைகளைக் கொண்ட தெய்வீக சக்தி, மாயா, வெல்வது மிகவும் கடினம். ஆனால் என்னிடம் சரணடைந்தவர்கள் மாயையை எளிதில் கடந்து செல்கிறார்கள்.

ராமாயணம் மேலும் கூறுகிறது:

ஸன்முக1 ஹோய் ஜீவ மோஹி ஜப3ஹின்,

ஜன்ம கோடி1 அக3 நாஸஹிம் தப3ஹின்

‘ஆன்மா கடவுளிடம் சரணடையும் தருணத்தில், முடிவில்லாத கடந்த கால வாழ்க்கையில் செய்த பாவச் செயல்களின் கணக்கு அவருடைய அருளால் அழிக்கப்படுகிறது.’

பகவத் கீதையின் மேற்கூறிய வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கடவுளின் அருளைப் பெறுவதற்குச் சரணடைய வேண்டியதன் அவசியத்தின் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சரணடைதல் என்றால் என்ன என்பது பற்றிய விவரங்கள் ஹரி ப4க்1தி1 விலாஸ், ப4க்1தி1 ரஸாம்ரித1 ஸிந்து4, வாயு பு1ராணம் மற்றும் அஹிர்பு3த்4னி ஸம்ஹிதை1யில் பின்வரும் முறையில் விளக்கப்பட்டுள்ளன:

ஆனுகூ1ல்யஸ்ய ஸங்க1ல்பஹ ப்1ரதி1கூ1லஸ்ய வர்ஜனம்

ரக்ஷிஷ்யதீ1தி1 விஶ்வாஸோ கோ3ப்1த்1ரித்1வே வரணம் த1தா2

ஆத்1மநிக்ஷேப1 கா1ர்ப1ண்யே ஷட்3விதா4 ஶரணாக3தி1ஹி

(ஹரி ப4க்1தி1 விலாஸ் 11.676)

மேற்கண்ட வசனம் இறைவனிடம் சரணடைவதன் ஆறு அம்சங்களை விளக்குகிறது

1. கடவுளின் விருப்பத்திற்கு இணங்க மட்டுமே ஆசைப்படுதல்: இயற்கையின் ஆற்றலால், நாம் அவருடைய ஊழியர்கள், மற்றும் ஒரு வேலைக்காரனின் கடமை எஜமானனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும். எனவே, சரணடைந்த கடவுளின் பக்தர்களாக, கடவுளின் தெய்வீக சித்தத்திற்கு ஏற்ப நம் விருப்பத்தை உருவாக்க வேண்டும். ஒரு காய்ந்த இலை காற்றுக்கு சரணடைகிறது. காற்று அதை மேலே தூக்குகிறதா, முன்னோக்கி அல்லது பின்னோக்கி எடுத்துச் செல்கிறதா, அல்லது தரையில் வீழ்த்துகிறதா என்று அது குறை கூறுவதில்லை. அதுபோல நாமும் கடவுளின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்

2. கடவுளின் விருப்பத்திற்கு எதிராக ஆசைப்படாதிருத்தல்: வாழ்க்கையில் நாம் எதைப் பெற்றாலும் அது நமது கடந்த கால மற்றும் நிகழ்கால கர்மங்களின் விளைவாகும். இருப்பினும், கர்மங்களின் பலன்கள் தானாக வருவதில்லை. கடவுள் அவற்றைக் குறிப்பிட்டு சரியான நேரத்தில் முடிவுகளைத் தருகிறார். கடவுள் தாமே முடிவுகளை வழங்குவதால், அவற்றை அமைதியாக ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக, உலகில் செல்வம், புகழ், இன்பம், ஆடம்பரம் போன்றவற்றை மக்கள் பெற்றால், கடவுளுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறார்கள். இருப்பினும், அவர்கள் துன்பம் அடைந்தால், அதற்குக் கடவுளைக் குறை கூறுகிறார்கள், 'கடவுள் எனக்கு ஏன் இப்படிச் செய்தார்?' என்று குறை கூறுகிறார்கள், சரணடைதலின் இரண்டாவது அம்சம், கடவுள் நமக்குத் தருவதைப் பற்றி புகார் செய்யாமல் இருப்பது.

3. கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கை: கடவுள் நித்திய தந்தை. படைப்பில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அவர் கவனித்துக்கொள்கிறார். பூமியில் பதினாயிரங்கோடிகள் கணக்கான எறும்புகள் உள்ளன, , அவை அனைத்தும் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும்.. உங்கள் தோட்டத்தில் சில ஆயிரம் எறும்புகள் பட்டினியால் இறந்ததை நீங்கள் எப்போதாவது கண்டீர்களா?அவை அனைத்தும் வழங்கப்படுவதை கடவுள் உறுதி செய்கிறார். மறுபுறம், ஒவ்வொரு நாளும் யானைகள் பல குன்றுகள் அளவு உணவை உண்ணுகிறது. கடவுள் அவர்களுக்கும் வழங்குகிறார். இவ்வுலக தந்தை கூட தன் குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார். அப்படியென்றால் நாம் ஏன் நம் நித்திய. தந்தையாகிய கடவுள் நம்மைக் கவனிப்பாரா இல்லையா என்று ஏன் சந்தேகிக்க வேண்டும்?அவருடைய பாதுகாப்பில் உறுதியான நம்பிக்கை வைப்பது சரணாகதியின் மூன்றாவது அம்சமாகும்

4. கடவுளுக்கு நன்றி செலுத்தும் மனப்பான்மையை பேணுவது: ஆண்டவரிடமிருந்து பல விலைமதிப்பற்ற பரிசுகளைப் பெற்றுள்ளோம். நாம் நடக்கும் பூமி, நாம் பார்க்கும் சூரிய ஒளி, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர் இவை அனைத்தும் இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்டவை. உண்மையில், நாம் உயிர்வாழ்வது அவரால் தான்; அவர் நம்மை உயிர்ப்பித்து, நம் ஆன்மாவில் உணர்வைக் கொடுத்துள்ளார். பதிலுக்கு நாம் அவருக்கு எந்த வரியும் செலுத்தவில்லை, ஆனால் அவர் நமக்குக் கொடுத்த அனைத்திற்கும் நாம் ஆழ்ந்த கடனாளியாக உணர வேண்டும். இது நன்றியுணர்வு.

இதற்கு நேர்மாறானது நன்றியற்ற உணர்வு. உதாரணமாக, ஒரு தந்தை தனது குழந்தைக்கு நிறைய செய்கிறார். இதற்காக குழந்தை தனது தந்தைக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் குழந்தை பதிலளிக்கிறது, ‘நான் ஏன் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும்? அவருடைய தந்தை அவரைக் கவனித்துக் கொண்டார், அவர் என்னைக் கவனித்துக்கொள்கிறார்.’ இது உலகத் தந்தைக்கு நன்றியின்மை. நமது நித்திய தந்தையாகிய கடவுளுக்கு அவர் அளித்த அனைத்திற்கும் நன்றியுடன் இருப்பது சரணாகதியின் நான்காவது அம்சமாகும்.

5. நம்மிடம் உள்ள அனைத்தையும் கடவுளுக்குச் சொந்தமானதாக பார்ப்பது: கடவுள் இந்த முழு உலகத்தையும் படைத்தார்; நாம் பிறப்பதற்கு முன்பே அது இருந்தது, நாம் இறந்த பிறகும் அது தொடரும். எனவே, எல்லாவற்றுக்கும் உண்மையான உரிமையாளர் கடவுள் மட்டுமே. ஒன்று நமக்குச் சொந்தமானது என்று நினைக்கும் போது, ​​கடவுளின் உரிமையை மறந்து விடுகிறோம்.

உதாரணமாக, நீங்கள் வீட்டில் இல்லாத போது ஒருவர் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களுடைய ஆடைகளை அணிந்து கொள்கிறார், உங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவை உண்கிறார், உங்கள் படுக்கையில் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது, ​​‘என் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தாய்?’ என்று கோபத்துடன் கேட்கிறீர்கள்.

அவர், ‘நான் எதையும் சேதப்படுத்தவில்லை. நான் எல்லாவற்றையும் சரியாகப் பயன்படுத்தினேன். ஏன் கோபப்படுகிறாய்?’ என்று கூறுகிறார்.

நீங்கள் பதிலளிப்பீர்கள், 'நீங்கள் எதையும் அழிக்காமல் இருக்கலாம், ஆனால் அது எனக்கு சொந்தமானது. என் அனுமதியின்றி பயன்படுத்தினால் அது திருடுவதற்கு சமம்'.

அதுபோலவே இந்த உலகமும் இதில் உள்ள அனைத்தும் இறைவனுக்கே சொந்தம். இதை நினைவில் வைத்து, நமது உரிமையை விட்டுவிடுவது சரணாகதியின் ஐந்தாவது அம்சமாகும்

6. சரணடைந்தோம் என்ற பெருமையை விட்டுவிடுதல்: நாம் செய்த நற்செயல்களைப் பற்றி நாம் பெருமிதம் கொண்டால், அகங்காரம் நாம் செய்த நற்செயல்களை, அழித்து விடுகிறது, ‘அது கடவுள் என் புத்தியை சரியான திசையில் தூண்டியதால் தான். என்னால் என்னால் அதை செய்ய முடிந்தது அதை தானாக செய்திருக்க முடியாது.’ இப்படிப்பட்ட பணிவு மனப்பான்மையைக் கடைப்பிடிப்பது சரணாகதியின் ஆறாவது அம்சமாகும்.

சரணாகதியின் இந்த ஆறு அம்சங்களையும் நம்மால் பூர்த்தி செய்ய முடிந்தால், நாம் கடவுளின் நிபந்தனையை நிறைவேற்றுவோம், மேலும் அவர் தனது கிருபையை நமக்கு வழங்குவார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
18. மோக்ஷ ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency