நாஸதோ1 வித்3யதே1 பா4வோ நாபா4வோ வித்3யதே1 ஸத1: |

உப4யோரபி1 த்3ருஷ்டோ1‌ன்த1ஸ்த்1வனயோஸ்த1த்1வத3ர்ஶிபி4: ||16||

ந—--இல்லை; அஸதஹ-—-நிலையற்றவற்றில்; வித்யதே--—இருக்கிறது;; பாவஹ-—-சகிப்புத்தன்மை; ந—இல்லை; அபாவஹ—நிறுத்தம்; ஸதஹ-—-நித்தியத்திற்கு;  உபயோஹோ---இரண்டில் அபி-—மேலும்; த்ருஷ்டஹ-—ஆய்வு செய்தபின்;  அன்தஹ--—முடிவு; து—--உண்மையை; அனயோஹோ-—-இவற்றை பற்றிய இந்த;  தத்வதர்ஶிபிஹி—---தீர்க்கதரிசிகளால்;

అనువాదం

BG 2.16: நிலையற்றவற்றில் சகிப்புத்தன்மை இல்லை, மற்றும் நித்தியத்திற்கு இடைநிறுத்தம் இல்லை. இந்த இரண்டின் இயல்புகளையும் ஆய்வு செய்தபின், உண்மையைக் கண்டறியும் தீர்க்கதரிசிகள் இந்த முடிவுக்கு வந்தனர்.

వ్యాఖ్యానం

ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் மூன்று நித்திய கூறுகளை குறிப்பிடுகிறது.

போ4க்1தா1 போ4க்3யம் ப்1ரேரிதா1ரம் ச1 மத்1வா

ஸர்வம் ப்1ரோக்11ம் த்1ரிவித4ம் ப்3ரஹ்மமேத1த்1 (1.12)

க்ஷரம் ப்1ரதா4னமம்ருதா1க்ஷரம் ஹரஹ

க்ஷாராத்1மானாவீஶதே1 தே3வ ஏக1ஹ (1.10)

ஸந்யுக்11மேத1த்1க்ஷரமக்ஷரம் ச1

வ்யக்1தா1வ்யக்11ம் ப4ரதே1விஶ்வமீஶஹ (1.8)

இந்த வேத மந்திரங்கள் அனைத்தும் கடவுள், ஆத்மா, மற்றும் மாயா ஆகிய மூன்றும் நித்திய கூறுகள் என்று கூறுகின்றன.

.கடவுள் நித்தியமானவர் எனவே, அவர் ஸத் (நித்திய தத்துவம்). வேதங்களில், இறைவன் சத்-சித்- ஆனந்த் (நித்திய அறிவு-ஆனந்த கடல்) என்று அழைக்கப்படுகிறார்.

ஆத்மா அழியாதது, எனவே, அது ஸத்1`- (நித்திய தத்துவம்)ஆக இருக்கிறது. ஆன்மாவும் ஸத் -சித்-ஆனந்த் ஆனால் சிறிய அணு வடிவத்தில் உள்ளது. எனவே, அது அஸத் (தற்காலிகமானது) என்று அழைக்கபபடுகிறது, ஆன்மாவும் சி 1த்1ஆனந்த்3 ஆனால் அணு வடிவத்தில் உள்ளது. எனவே ஆன்மா அணு உண்மை, அணு மனம் மற்றும் அணு ஆனந்தம்.

மாயா, உலகம் உருவாக்கப்பட்ட கொள்கை, நித்தியமானது அல்லது ஸத். இருப்பினும், நம்மைச் சுற்றி தோன்றிய நாம் காணும் அனைத்து பொருள்களும், காலப்போக்கில் அழிந்துவிடும். எனவே, அவை அனைத்தும் அஸத்1 அல்லது தற்காலிகமானவை என்று அழைக்கப்படலாம். ஆக, உலகமே அஸத் தற்காலிகமானவை என்ற நிலையில், ஸத்தாக (நித்தியமாக) இருப்பது மாயா.

உலகம் தற்காலிகமானது (அஸத்) என்று சொல்லும் பொழுது ​​இதை இல்லாதது (மித்யா) என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. அஸத்1 (தற்காலிகமானது) என்பது மித்1யா (இல்லாதது) என்று அர்த்தமல்ல. உலகமே மித்யா என்று சில தத்துவவாதிகள் கூறுகின்றனர். நமக்குள் இருக்கும் அறியாமைதான் உலகை உணர வைக்கிறது என்றும், ப்ரஹ்ம ஞானத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், உலகம் நிலையிலிருந்து அழிந்துவிடும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இது உண்மையாக இருந்தால், கடவுள்-உணர்ந்த புனிதர்களுக்காக உலகம் இனி இருந்திருக்கக்கூடாது. அவர்கள் அறியாமையை அழித்துவிட்டதால், உலகம் அவர்களுக்கு இருப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். கடவுள்-உணர்தல் நிலையை அடைந்த பிறகும் இந்த மகான்கள் ஏன், எப்படி புத்தகங்களை எழுதினார்கள்? பேப்பரும் பேனாவும் எங்கிருந்து வந்தது? ப்ரஹ்ம ஞானிகள் உலகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்காகவும் உலகம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. அதுமட்டுமல்லாமல், ப்ரஹ்ம ஞானிகளுக்குக் கூடத் தங்கள் உடலை வளர்க்க உணவு தேவை. வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன: ப1ஶ்வாதி3பி4ஶ்சா1விஶேஷத1, ‘இறைவனை உணர்ந்த மகான்கள் கூட, விலங்குகளைப் போலவே பசியுடன் இருப்பார்கள், உணவை உண்ண வேண்டும்.’ இந்த உலகம் அவர்களுக்கு இல்லை என்றால், அவர்கள் எப்படி, ஏன் சாப்பிட வேண்டும்?

மேலும், தை1த்1தி1ரிய உபநி1ஷத3ம், கடவுள் உலகில் எங்கும் வியாபித்திருக்கிறார் என்று நமக்குத் திரும்பத் திரும்பத் தெரிவிக்கிறது.

ஸோ கா1ம்யத13ஹு ஸ்யாம் ப்1ரஜாயெயெதி1 ஸ த1போ த1ப்1யத1

11ஸ்த1ப்1த்1வா இத3ம்ஸர்வமஸ்ருஜத1 யதி33ம் கி1ம் ச11த்1ஸ்ருஷ்ட்1வா

1தே3வானுப்1ராவிஷத்113னுப்1ரவிஶ்ய ஸச்11 த்1யச்1சா14வத்1

நிருக்11ம் சா1னிருக்11ம் ச1 நிலயனம் சா1நிலயனம் ச1 விஞ்ஞானம்

சா1விஞ்ஞானம் ச1 ஸத்1யம் சா1ந்ருத1ம் ச1 ஸத்1யமபா4வாத்1 யதி3த3ம்

கி1ம் ச1 1த்1ஸத்1யமித்1யாச1க்1ஷதே113ப்1யேஷஶ்லோகோ14வதி1 (2.6.4)

கடவுள் உலகைப் படைத்தது மட்டுமல்ல, அதன் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி இருக்கிறார் என்று இந்த வேத மந்திரம் கூறுகிறது. கடவுள் உண்மையிலேயே இந்த உலகில் வியாபித்திருக்கிறார் என்றால், உலகம் எப்படி இல்லை என்று ஆகும்? உலகம் மித்யா (இல்லாதது) என்று கூறுவது, கடவுள் உலகத்தில் வியாபித்திருப்பதற்கு முரண்படுவதாகும். இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் உலகம் இருக்கிறது, ஆனால் அது விரைவிற் செல்கின்றது என்று விளக்குகிறார். எனவே, அவர் அதை 'தற்காலிகமானது' அல்லது அஸத் என்று அழைக்கிறார்; அவர் அதை மித்யா அல்லது 'இல்லாதது' என்று அழைக்கவில்லை.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency