అధ్యాయం 3: கர்ம யோகம்

செயலின் யோகம்

இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து உயிரினங்களின் உள்ளார்ந்த இயல்பு, வேலை செய்வது என்றும், ஒரு கணம் கூட செயலில்லாமல் இருக்க முடியாது என்றும் விளக்குகிறார். காவி அங்கிகளை அணிந்து வெளிப்புற துறவைக் காட்டி ஆனால் உள்வாரியாக அவர்களின் புலன்களின் பொருள்களில் பற்றுடன் வாழ்கின்றவர் உண்மையில் கபட வேடதாரிகள். கர்ம யோகத்தை கடைப்பிடித்து, வெளிப்புறமாக செயலில் ஈடுபட்டு ஆனால் உள்ளிருந்து பற்றுதலை கைவிடுபவர்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள், ஸ்ரீ கிருஷ்ணர் பின்னர் அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளின் படைப்பு அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகளாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் உள்ளன என்று வலியுறுத்துகிறார். கடவுளுக்குக் கடமையாக நாம் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யும்போது, ​​அத்தகைய வேலை யாகம் (தியாகம்) ஆகிறது. யாகம் செய்வது இயற்கையாகவே தேவலோக தெய்வங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் அவை நமக்கு பொருள் செழிப்பை வழங்குகின்றன. இத்தகைய யாகம் மழை பொழிய செய்கிறது, மேலும் மழை வாழ்க்கைக்கு வாழ்வாதாரமான தானியங்களைப் பயிரிட உதவுகிறது. இந்த சுழற்சியில் தங்கள் பொறுப்பை ஏற்காதவர்கள் உண்மையில் பாவச் செயலை செய்தவர்கள் ஆகிறார்கள்; தங்கள் புலன்களின் மகிழ்ச்சிக்காக மட்டுமே வாழ்கிற அவர்களின் வாழ்க்கை வீணாகிறது.

 

ஸ்ரீ கிருஷ்ணர் பின்னர், மற்ற மனிதர்களைப் போலல்லாமல், சுயத்தில் நிலைத்திருக்கும் ஞான ஆன்மாக்கள் ஆன்மாவின் மட்டத்தில் உயர்ந்த பொறுப்புகளை நிறைவேற்றுவதால், உடலைச் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று விளக்குகிறார். இருப்பினும், அவர்கள் தங்கள் சமூகக் கடமைகளைக் கைவிட்டால், அது ஞான ஆன்மாக்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் சாமானியர்களின் மனதில் முரண்பாடுகளை உருவாக்குகிறது. எனவே, உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக, மதிநுட்பம் உடையவர் தனிப்பட்ட வெகுமதிக்கான எந்த நோக்கமும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அறியாதவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முன்கூட்டியே கைவிடுவதை இது தடுக்கும். இந்த நோக்கத்திற்காகவே முற்காலத்தில் ஞானம் பெற்ற மன்னர்களான ஜனக் மற்றும் பிறர் தங்கள்- பணிகளைச் செய்தனர்

தன்னிச்சை கூட அல்லாமல் மக்கள் பலவந்தமாக ஏன் பாவச் செயல்களை செய்கிறார்கள் என்று அர்ஜுனன் கேட்கிறார். உலகத்தின் அனைத்தையும் பேராவலுடன் விழுங்கி பேரழிவை உண்டாக்கும் பாவ பகைவன் காமம் மட்டுமே என்று பகவான் விளக்குகிறார். நெருப்பு புகையால் மூடப்படுவது போலவும், கண்ணாடி தூசியால் மூடப்படுவது போலவும், ஆசை ஒருவரின் அறிவை மறைத்து, புத்தியை இழுத்துச் செல்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம், பாவத்தின் உருவகமான இந்த ஆசை என்ற எதிரியைக் கொன்று, அவரது புலன்கள், மனம் மற்றும் புத்தியைக் கட்டுக்குள் கொண்டு வருமாறு அவருக்கு கூறுகிறார்.

భగవద్గీత 3.1 - 3.2 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனன் கூறினார்: ஓ ஜனார்தனா, நீங்கள் அறிவை செயலை விட மேலானதாகக் கருதினால், ஏன் இந்த பயங்கரமான போரை நடத்தச் சொல்கிறீர்கள்? உங்களது தெளிவற்ற அறிவுரையால் என் புத்தி கலங்குகிறது. தயவு செய்து நான் மிக உயர்ந்த நன்மையை அடையக்கூடிய ஒரு பாதையை தீர்க்கமாக எடுத்துரையுங்கள்.

భగవద్గీత 3.3 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பகவான் கூறினார்: ஓ பாவமற்றவனே, ஞானத்தை நோக்கி செல்லும் இரண்டு பாதைகள் முன்பு என்னால் விளக்கப்பட்டுள்ளன: சிந்தனையில் நாட்டங்கொண்ட அறிவின் பாதை மற்றும் செயலில் நாட்டங்கொண்ட செயலின் பாதை.

భగవద్గీత 3.4 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

வெறும் வேலையில் இருந்து விலகி இருப்பதன் மூலம் கர்ம வினைகளிலிருந்து ஒருவர் விடுதலைபெற முடியாது, அல்லது வெறும் உடல் துறப்பினால் அறிவின் பரிபூரணத்தை அடைய முடியாது.

భగవద్గీత 3.5 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒரு கணம் கூட யாரும் செயல்களை செய்யாமல் இருக்க முடியாது. உண்மையில், அனைத்து உயிரினங்களும் ஜட இயற்கையில் (மூன்று குணங்கள்) பிறந்த தங்கள் குணங்களால் மூன்று விதமான செயற்பாட்டு முறைகளில் செயல்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

భగవద్గీత 3.6 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

செயல்களின் வெளிப்புற உறுப்புகளைக் கட்டுப்படுத்துபவர்கள், அதேநேரத்தில் மனதில் புலன்களின் மீது தொடர்ந்து கருத்தூன்றி இருத்தலால், நிச்சயமாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் மற்றும் கபடவாதிகள் என்று அழைக்கப்படுவார்கள்.

భగవద్గీత 3.7 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆனால் அர்ஜுனா, தங்கள் அறிவு புலன்களை மனதால் கட்டுப்படுத்தி, வேலை செய்யும் புலன்களை பற்றற்ற வேலையில் ஈடுபடுத்தும் அந்த கர்ம யோகிகள் நிச்சயமாக உயர்ந்தவர்கள்.

భగవద్గీత 3.8 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

செயலற்ற தன்மையை விட செயல் மேலானது என்பதால், இவ்வாறு உனக்குவிதிக்கப்பட்ட வேதக் கடமைகளைச் செய்ய வேண்டும். செயல்பாட்டை நிறுத்தினால் உன் உடலின் பராமரிப்பு கூட சாத்தியமில்லை.

భగవద్గీత 3.9 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒப்புயர்வற்ற பகவானுக்கு ஒரு யஞ்ஞ (யாகம்) செய்ய வேண்டும், இல்லையெனில், அது இந்த ஜட உலகில் அடிமைத்தனத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குந்தியின் மகனே, கடவுளின் திருப்திக்காக, முடிவுகளுடன் பற்றுதல் அற்று உனது விதிக்கப்பட்ட கடமைகளை செய்.

భగవద్గీత 3.10 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

படைப்பின் தொடக்கத்தில், பிரம்மா மனிதகுலத்தை கடமைகளுடன் உருவாக்கினார், மேலும், அவர் கூறினார்,'இந்த யாகங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுங்கள், ஏனென்றால் நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அவை உங்களுக்கு வழங்கும்.'

భగవద్గీత 3.11 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உங்கள் தியாகத்தால், தேவலோகக் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள், மனிதர்களுக்கும் தேவலோக தெய்வங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பால், அனைவருக்கும் பெரும் செழிப்பு மேலோங்கி இருக்கும்.

భగవద్గీత 3.12 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

யாகம் செய்வதால் திருப்தி அடைகிற தேவலோக தெய்வங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து வாழ்க்கைத் தேவைகளையும் வழங்குவார்கள். ஆனால், ப்ரதிபலன் செய்யாமல் கொடுத்ததை அனுபவிப்பவர்கள், உண்மையிலேயே திருடர்கள்.

భగవద్గీత 3.13 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

யாகத்தில் முதலில் அளிக்கப்படும் உணவை உண்ணும் ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்கள் சொந்த இன்பத்திற்காக உணவை சமைக்கும் மற்றவர்கள் உண்மையில் பாவத்தை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.

భగవద్గీత 3.14 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அனைத்து உயிரினங்களும் உணவின் மூலம் வாழ்கின்றன, மழையால் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. தியாகம் செய்வதால் மழை பெய்யும், விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது தியாகம் ஆகிறது.

భగవద్గీత 3.15 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

மனிதர்களுக்கான கடமைகள் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன, மேலும் வேதங்கள் கடவுளால் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே, எங்கும் நிறைந்த இறைவன் தியாகச் செயல்களில் நித்தியமாக இருக்கிறார்.

భగవద్గీత 3.16 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ பார்த்தா, வேதங்களால் நிறுவப்பட்ட யாகத்தின் சுழற்சியில் தங்கள் பொறுப்பை ஏற்காதவர்கள் பாவப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் புலன்களின் மகிழ்ச்சிக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; உண்மையில், அவர்களின் வாழ்க்கை வீணானது.

భగవద్గీత 3.17 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆனால், சுயத்தில் மகிழ்ச்சி அடைந்து, சுயத்தில் பிரகாசித்து, முழு திருப்தி அடைபவர்களுக்கு, எந்தக் கடமையும் இல்லை.

భగవద్గీత 3.18 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அத்தகைய சுயத்தை-உணர்ந்த ஆன்மாக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலோ அல்லது துறப்பதிலோ எதையும் பெறவோ அல்லது இழக்கவோ இல்லை. தங்கள் சுயநலத்தை நிறைவேற்ற மற்ற உயிரினங்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை

భగవద్గీత 3.19 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எனவே, பற்றுதலைக் கை விட்டு, செயல்களை கடமையாகச் செய், ஏனென்றால் பலன்களின் மீது பற்று கொள்ளாமல் உழைத்தால், ஒருவர் உன்னதத்தை அடைகிறார்.

భగవద్గీత 3.20 - 3.21 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ததன் மூலம், மன்னர்ஜனக் மற்றும் பிறர் முழுநிறைவாக்கல் அடைந்தனர். நீயும் உலக நன்மைக்கு முன்னுதாரணமாக உன் கடமைகளை செய்ய வேண்டும். சிறப்புடைய மக்கள் எந்தச் செயலைச் செய்தாலும், எந்த அளவுகோல் நிர்ணயித்தாலும் சாதாரண மக்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் எந்த அளவுகோல் நிர்ணயித்தாலும், உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.

భగవద్గీత 3.22 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பார்த்தா, மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமில்லை, பெறுவதற்கும் அடைவதற்கும் எனக்கு எதுவும் இல்லை. ஆனாலும், விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

భగవద్గీత 3.23 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஏனென்றால், நான் விதித்த கடமைகளை கவனமாகச் செய்யவில்லை என்றால், ஓ பார்த்தா, எல்லா மனிதர்களும் எல்லா வகையிலும் என் வழியைப் பின்பற்றுவார்கள்

భగవద్గీత 3.24 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் விதித்த செயல்களைச் செய்வதை நிறுத்தினால், இந்த உலகங்கள் அனைத்தும் அழிந்துவிடும். மனித இனத்தின் அமைதியை குலைக்கும் கலவரத்திற்கு நானே பொறுப்பாவேன்.

భగవద్గీత 3.25 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பரத வம்சத்தில் தோன்றியவனே , அறிவிலிகள் முடிவுகளின் மீது பற்றுக்கொண்டு தங்கள் கடமைகளைச் செய்வது போல, அறியாமைக்குரிய மக்களை நேர்வழியில் அழைத்துச் செல்வதற்காகப் பற்றின்றிச் செயல்பட வேண்டும்.

భగవద్గీత 3.26 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புத்திசாலிகள், பலன் தரும் செயல்களில் பற்றுள்ள அறியாமைக்குரியவர்களின் புத்தியில் முரண்பாட்டை உருவாக்கி, அவர்களை வேலையை நிறுத்தச் செய்யக்கூடாது. மாறாக, அறிவொளியுடன் தங்கள் கடமைகளைச் செய்வதன் மூலம், அவர்கள் அறியாதவர்களையும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தூண்ட வேண்டும்.

భగవద్గీత 3.27 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அனைத்து நடவடிக்கைகளும் ஜட இயற்கையின் மூன்று முறைகளால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அறியாமையால் சூழப்பட்ட ஆத்மா தன்னை உடல் என்று தவறான அடையாளத்தால் ஏமாற்றப்பட்டு தன்னை செயல்களை செய்பவராக நினைக்கிறது.

భగవద్గీత 3.28 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ வலிமையான கைகளை கொண்ட அர்ஜுனா, ஒளிமயமான மனிதர்கள் ஆன்மாவை குணங்கள் மற்றும் செயல்களில் இருந்து வேறுபடுத்துகிறார்கள். குணங்கள் (உணர்வுகள், மனம் மற்றும் பிறவற்றின் வடிவத்தில்) மட்டுமே குணங்களுக்கிடையில் (உணர்தல் பொருள்களின் வடிவத்தில்) நகரும் என்று அவர்கள் உணர்கிறார்கள், இதனால் அவர்கள் அவற்றில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.

భగవద్గీత 3.29 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ப்ரக்ருதேஹே—-பொருள் இயற்கையின்; குண—-பொருள் இயற்கையின் முறைகளால்; ஸமூடாஹா—- மாயையால் சூழப்பட்டு; ஸஜ்ஜந்தே—--இணைகின்றனர்; குண-கர்மஸு—--செயல்களின் விளைவுகளுக்கு; தான்— --அவை; அக்ருத்ஸ்ன-விதஹ—--அறிவு இல்லாதவர்கள்; மந்தான்—--அறிவு இல்லாதவர்கள்; கிருத்ஸ்ன-வித்—--அறிவு உள்ளவர்கள்; ந விசாலயேத்---அமைதி இழக்கக்கூடாது

భగవద్గీత 3.30 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எல்லாக் காரியங்களையும் எனக்குப் ப்ரஸாதமாகச் செய்து, என்னையே ஒப்புயர்வற்ற இறைவனாக தியானித்து . ஆசை மற்றும் சுயநலத்தில் இருந்து விடுபடு, உன் மன வருத்தத்தில் இருந்து விடுபட்டு போராடுங்கள்,

భగవద్గీత 3.31 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என்னுடைய இந்த போதனைகளை பொறாமையில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன், கடைப்பிடிப்பவர்கள் கர்ம பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

భగవద్గీత 3.32 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆனால், எனது போதனைகளில் தவறுகளைக் கண்டறிபவர்கள், அறிவு இல்லாதவர்களாகவும், பாகுபாடுகள் அற்றவர்களாகவும் இருப்பதால், அவர்கள் இந்தக் கொள்கைகளைப் புறக்கணித்து, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

భగవద్గీత 3.33 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புத்திசாலிகள் கூட தங்கள் இயல்புகளுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள், ஏனென்றால் எல்லா உயிரினங்களும் அவற்றின் இயல்பான போக்குகளால் உந்தப்படுகின்றன. இயற்கை தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குவதால் அடக்குமுறையால் ஒருவர் என்ன பெறுவார்?

భగవద్గీత 3.34 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஐம்புலன்கள் இயற்கையாகவே உணர்வு பொருள்களின் மீது பற்றுதலையும் வெறுப்பையும் அனுபவிக்கின்றன, ஆனால் அவைகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை, ஏனென்றால் அவை தாக்குவதற்காக பதுங்கியிருக்கும் எதிரிகளை போன்றவை.

భగవద్గీత 3.35 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒருவருக்கு இயற்கையாக விதிக்கப்பட்ட கடமையை குறைபாடுகளுடன் செய்தாலும் மற்றவற்கு விதிக்கப்பட்ட கடமையைச் சரியாகச் செய்வதை விட, சிறந்தது. உண்மையில், ஆபத்து நிறைந்த மற்றொரு பாதையை பின்பற்றுவதை விட, ஒருவரின் கடமையை நிறைவேற்றுவதில் இறப்பது விரும்பத்தக்கது.

భగవద్గీత 3.36 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனன் கேட்டார்: ஓ விருஷ்ணியின் (கிருஷ்ணன்) வம்சாவளியினரே, (கிருஷ்ணனரே) ஒருவன் ஏன் பாவச் செயல்களைச் செய்யத் தூண்டப்படுகிறான்?

భగవద్గీత 3.37 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: இது காமம் மட்டுமே, இது மோகத்தின் செயல்படும் முறையுடன் தொடர்பு கொண்டு பிறக்கிறது, பின்னர் கோபமாக மாறுகிறது. இதை உலகில் உள்ள பாவம், அனைத்தையும் விழுங்கும் எதிரி என்று அறிந்து கொள்ளுங்கள்.

భగవద్గీత 3.38 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நெருப்பு புகையால் மூடப்படுவது போலவும், தூசி கண்ணாடியை மறைப்பது போலவும், கருவில் கரு மறைந்திருப்பது போலவும், ஒருவரின் அறிவு ஆசையால் மறைக்கப்படுகிறது.

భగవద్గీత 3.39 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ குந்தியின் மகனே, மிகவும் விவேகமுள்ளவர்களின் அறிவு கூட இந்த நிரந்தர எதிரியால் திருப்தி அடையாத ஆசையின் வடிவத்தில் மூடப்பட்டு நெருப்பைப் போல எரிகிறது,

భగవద్గీత 3.40 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவை ஆசையின் இனப்பெருக்கம் என்று கூறப்படுகிறது. அவைகள் மூலம், அது ஒருவரின் அறிவை மழுங்கடித்து, உருவான ஆன்மாவை ஏமாற்றுகிறது.

భగవద్గీత 3.41 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆகவே, ஓ பரத வம்சத்தினரில் சிறந்தவனே, தொடக்கத்திலேயே புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாவத்தின் உருவமாகிய, அறிவையும் உணர்வையும் அழிக்கும் ஆசை என்ற இந்த எதிரியைக் கொன்றுவிடு.

భగవద్గీత 3.42 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புலன்கள் ஸ்தூல உடலை விட மேலானது, புலன்களை விட மனம் உயர்ந்தது. மனதிற்கு அப்பாற்பட்டது புத்தி, புத்திக்கு அப்பாற்பட்டது ஆன்மா.

భగవద్గీత 3.43 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ வலிமையான கைகளைக் கொண்ட அர்ஜுனா, இவ்வாறாக. ஆன்மாவை ஜடப் புத்தியை விட உயர்ந்தது என அறிந்து, , தாழ்ந்த சுயத்தை (உணர்வுகள், மனம் மற்றும் புத்தியை) உயர்ந்த சுயத்தால் (ஆன்மாவின் வலிமையால்) அடக்கி, காமம் எனப்படும் இந்த வல்லமைமிக்க எதிரியைக் கொல்.
Swami Mukundananda
3. கர்ம யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency