ஶ்ரீப4கவானுவாச1 |
அஸந்ஶயம் மஹாபா3ஹோ மனோ து3ர்னிக்3ரஹம் ச1லம் |
அப்4யாஸேன து1 கௌ1ன்தே1ய வைராக்3யேண ச1 க்3ருஹ்யதே1 ||35||
ஶ்ரீ-பகவான் உவாச---—பகவான் கிருஷ்ணர் கூறினார்; அஸந்ஶயம்--—சந்தேகமின்றி; மஹா-பாஹோ---வலிமையான கைகளை கொண்டவர்; மனஹ—--மனம்; துர்நிக்ரஹம்—--கட்டுப்படுத்துவது கடினம்; சலம்--—அமைதியற்ற; அப்யாஸேன—--நடைமுறையால்; து—--ஆனால்; கௌந்தேய—--குந்தியின் மகன் அர்ஜுனன்; வைராக்யேண--—பற்றற்ற தன்மையால்; ச--—மற்றும்; க்ரிஹ்யதே—--கட்டுப்படுத்த முடியும்
BG 6.35: பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்: ஓ வலிமைமிக்க கைகளை கொண்ட குந்தியின் மகனே, நீ சொல்வது சரிதான்; மனதை அடக்குவது உண்மையில் மிகவும் கடினம். ஆனால் பயிற்சி மற்றும் பற்றின்மை மூலம், அதை கட்டுப்படுத்த முடியும்.
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் கருத்துக்கு பதிலளித்து, அவரை மஹாபாஹோ, அதாவது 'வலிமையான கைகளை உடையவர்' என்று அழைத்தார். அவர் மறைமுகமாக, ‘அர்ஜுனா, நீ போரில் வீரமிக்க வீரர்களை தோற்கடித்தாய். மனதை வெல்ல முடியாதா?’ என்று அர்ஜுனனுக்கு கோடி காட்டுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் பிரச்சனையை மறுக்கவில்லை, 'அர்ஜுனா நீ ஏன் முட்டாள்தனமாக பேசுகிறாய்? மனதை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும்.’ என்று கூறவில்லை மாறாக மனதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்ற அர்ஜுனனின் கூற்றை அவர் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், உலகில் பல விஷயங்களை அடைவது கடினம், ஆனாலும், நாம் தயங்காமல் முன்னேறிச் செல்கிறோம். உதாரணமாக, கடல் ஆபத்தானது என்பதையும், பயங்கரமான புயல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் மாலுமிகள் அறிவார்கள். இருப்பினும், அவர்கள் அந்த ஆபத்துக்களை ஒருபோதும் கரையில் இருப்பதற்கான போதுமான காரணங்களாக பார்த்ததில்லை. இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மனதை பற்றின்மை (வைராக்3யம்) மற்றும் பயிற்சியால் (அப்4யாஸ்) கட்டுப்படுத்த முடியும் என்று உறுதியளிக்கிறார்.
வைராக்கியம் என்றால் பற்றின்மை. முடிவில்லாத வாழ்வில் இருந்து வந்த பற்றுதல்கள் காரணமாக, மனம் அதன் பற்றுள்ள பொருட்களை நோக்கி ஓடுவதற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பற்றுதலை நீக்குவது மனதின் தேவையற்ற அலைச்சலை நீக்குகிறது.
பயிற்சி என்பது ஒரு பழைய பழக்கத்தை மாற்றுவதற்கு அல்லது புதிய ஒன்றை வளர்ப்பதற்கு பயிற்சி அல்லது ஒருங்கிணைந்த மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்று பொருள்படும். ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு பயிற்சி என்பது மிக முக்கியமான சொல். மனித முயற்சியின் அனைத்துத் துறைகளிலும், பயிற்சி என்பது தேர்ச்சி மற்றும் சிறப்பிற்கான கதவைத் திறக்கும் திறவுகோலாகும். உதாரணமாக, தட்டச்சு செய்தல் போன்ற செயல்பாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முதன்முறையாக மக்கள் தட்டச்சு செய்யத் தொடங்கும் போது, அவர்களால் ஒரு நிமிடத்தில் ஒரு வார்த்தையை மட்டுமே தட்டச்சு செய்ய முடியும். ஆனால் ஒரு வருடம் தட்டச்சு செய்த பிறகு, எண்பது வார்த்தைகள் நிமிட வேகத்தில் அவர்களின் விரல்கள் தட்டச்சுவிசைப்பலகையில் பறக்கின்றன. இந்த திறமை பயிற்சி மூலம் மட்டுமே வருகிறது. அதுபோலவே, பிடிவாதமும், கொந்தளிப்பும் நிறைந்த மனதை, பயிற்சி (அப்யாஸ்) மூலம் ஒப்புயர்வற்ற இறைவனின் தாமரை பாதங்களில் தங்க வைக்க வேண்டும். மனதை உலகத்திலிருந்து விலக்குவது - இது பற்றின்மை. (வைராக்கியம்) - மேலும் மனதைக் கடவுளின் மீது நிலை நிறுத்துவது- பயிற்சி (அப்யாஸ்). பதஞ்சலி முனிவரும் இதே அறிவுறுத்தலைக் கூறுகிறார்:
அப்4யாஸ வைராக்3யாப்4யாம் த1ந்நிரோத4ஹ (யோக3தர் 3ஶன் 1.12)
‘மனதின் குழப்பங்களை நிலையான பயிற்சி மற்றும் பற்றின்மை மூலம் கட்டுப்படுத்தலாம்.’
ஶ்ரீப4கவானுவாச1 |
அஸந்ஶயம் மஹாபா3ஹோ மனோ து3ர்னிக்3ரஹம் ச1லம் |
அப்4யாஸேன து1 கௌ1ன்தே1ய வைராக்3யேண ச1 க்3ருஹ்யதே1 ||35||
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்: ஓ வலிமைமிக்க கைகளை கொண்ட குந்தியின் மகனே, நீ சொல்வது சரிதான்; மனதை அடக்குவது உண்மையில் மிகவும் கடினம். ஆனால் பயிற்சி மற்றும் …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!