தை3வீ ஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்1யயா |

மாமேவ யே ப்1ரப1த்3யன்தே1 மாயாமேதா1ம் த1ரன்தி1 தே1 ||14||

தெய்வீ—--தெய்வீக; ஹி—--நிச்சயமாக; ஏஷா—--இது; குண-மயீ—--இயற்கையின் மூன்று முறைகளைக் கொண்டது; மம—--என்; மாயா—--கடவுளின் வெளிப்புற ஆற்றல்; துரத்யயா—--வெல்வது மிகவும் கடினம்; மாம்—---எனக்கு; ஏவ—--நிச்சயமாக; யே----யார்; ப்ரபத்யந்தே---சரணாகதி; மாயாம் ஏதாம்--—இந்த மாயையை; தரந்தி—--கடந்து; தே---அவர்கள்

అనువాదం

BG 7.14: எனது தெய்வீக ஆற்றல், மாயா, இயற்கையின் மூன்று முறைகளைக் கொண்டுள்ளது, அதை வெல்வது மிகவும் கடினம். ஆனால் என்னிடம் சரணடைந்தவர்கள் அதை எளிதில் கடந்து விடுகிறார்கள்.

వ్యాఖ్యానం

சிலர் ஜட சக்தியை இல்லாதது (மித்யா) என்று அறிவிக்கிறார்கள். நாம் அறியாமையில் இருப்பதால் தான் மாயையை உணர்கிறோம். .ஆனால் நாம் அறிவில் அமர்ந்தால், மாயா இல்லாமல் போகும் என்று கூறுகிறார்கள். மாயை அகற்றப்பட்டு ஆன்மாவே இறுதி உண்மை என்பதை நாம் புரிந்துகொள்வோம். என்று அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், பகவத் கீதையின் இந்த வசனம் அத்தகைய கோட்பாட்டை மறுக்கிறது. மாயா ஒரு மாயை அல்ல அது கடவுளின் ஆற்றல் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்; ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் கூறுகிறது:

மாயாம் து1 ப்1ரக்1ருதி1ம் வித்3யான்மாயினம் து1 மஹேஸ்வரம் (4.10)

' மாயை என்பது ஆற்றல் (ப்ரகி1ரிதி1), அதே சமயம் கடவுள் ஆற்றல் மிக்கவர்.' ராமாயணம் கூறுகிறது:

ஸோ தா3ஸீ ரகு4பீ3ர கி1 ஸமுஜே மித்2யா ஸோபி1

'சிலர் மாயையை இல்லாதது (மித்யா) என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில், ஒரு ஆற்றல் சக்தியான இது கடவுளின் சேவையில் ஈடுபட்டுள்ளது.'

இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் மாயையை வெல்வது மிகவும் கடினம் என்று கூறுகிறார், ஏனென்றால் அது அவருடைய ஆற்றல். மாயையை யாரேனும் வென்றால், அந்த நபர் கடவுளையே வென்றார் என்று அர்த்தம். கடவுளை யாராலும் வெல்ல முடியாது என்பதால் மாயையையும் யாராலும் வெல்ல முடியாது. மேலும் மாயையால் சூழப்பட்ட மனதை ஞானி, ஸன்யாஸீ அல்லது, செயல்களை செய்பவர் ஆகிய எவராலும் சுயமுயற்சியின் மூலம் வெற்றிகரமாகக் மாயையை வெல்ல முடியாது.

இதைக் கேட்டு, ‘அப்படியென்றால் நான் எப்படி மாயாவை வெல்வேன்?’ என்று அர்ஜுனன் கேட்கக்கூடும். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தின் இரண்டாவது வரியில் பதில் அளிக்கிறார். அவர் கூறுகிறார், ' அர்ஜுனா, உன்னத இறைவனான என்னிடம் நீ சரணடைந்தால், என் அருளால், நான் உன்னை ஜட வாழ்வின் கடலை கடக்க வைப்பேன். நான் மாயா சக்தியிடம் இந்த ஆன்மா என்னுடையதாக மாறிவிட்டது எனவே தயவு செய்து அவரை விட்டுவிடுங்கள் என்று சுட்டிக் காட்டுவேன்.’ ஜட ஆற்றல் கடவுளிடமிருந்து இந்த சமிக்ஞையைப் பெற்றால், அது அத்தகைய ஆத்மாவை அதன் அடிமைத்தனத்திலிருந்து உடனடியாக விடுவிக்கிறது. மாயை சக்தி, ‘எனது பணி இவ்வளவுதான் - ஆன்மா கடவுளின் பாதத்தை அடையும் வரை தொந்தரவு செய்து கொண்டே இருப்பது. இந்த ஆன்மா கடவுளிடம் சரணடைந்ததால், என் வேலை முடிந்தது.' என்று கூறுகிறது.

அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணம் மூலம் இதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் நண்பரை சந்திக்க விரும்பி அவரது வீட்டின் வாயிலை அடைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாய்கள் ஜாக்கிரதை என்ற அறிவிப்புப் பலகையை கொண்ட அவரது வீட்டின் வேலியின் உட்புறத்தில் பயிற்சி பெற்ற காவலாளியாக அவருடைய செல்லப் பிராணியான ஜெர்மன் ஷெப்பர்ட் புல்வெளியில் நின்று, உங்களை பயமுறுத்துகிறது. நீங்கள் பின்புற வாயில் வழியாக வீட்டுக்குள் நுழைய நினைத்து வேலியைச் சுற்றிச் செல்ல முடிவு செய்கிறீர்கள். இருப்பினும், ஜெர்மன் ஷெப்பர்ட் சுற்றி வந்து, 'தைரியம் இருந்தால் இந்த வீட்டிற்குள் நுழைந்து காட்டு' என்ற வகையில் உங்களை பயமுறுத்துகிறது உங்களுக்கு வேறு வழியில்லாத போது, ​​நீங்கள் உங்கள் நண்பரை அழைக்கிறீர்கள். அவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த உங்கள் நண்பர் தனது நாய் உங்களை தொந்தரவு செய்வதைப் பார்த்து அந்த நாயிடம், அவர், 'இல்லை, ஸ்மோக்கி! இங்கே வந்து உட்கார்.' கூறுகிறார் .நாய் உடனடியாக சமாதானம் அடைந்து, தன் எஜமானரின் பக்கத்தில் வந்து அமர்கிறது. இப்போது, ​​நீங்கள் பயமின்றி கேட்டைத் திறந்து உள்ளே செல்லுங்கள் சென்று நண்பரை சந்திக்கிறீர்கள்.

அதுபோலவே, நம்மைத் தொந்தரவு செய்யும் பொருள் ஆற்றல் கடவுளுக்கு அடிபணிகிறது. நமது சொந்த முயற்சியால் அதைக் கடக்க முடியாது. கடவுளிடம் சரணடைவது ஒன்றே அதை கடப்பதற்கான வழி. இதை ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் அழுத்தமாக உணர்த்துகிறார். கடவுளிடம் சரணடைவதன் மூலம் நாம் மாயையைக் கடக்க முடியும் என்றால், மக்கள் ஏன் அவரிடம் சரணடைவதில்லை? இதை ஸ்ரீ கிருஷ்ணர் பின்வரும் வசனத்தில் விளக்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
7. ஞான விஞ்ஞான யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency