பூ4மிராபோ1‌னலோ வாயு: க2ம் மனோ பு3த்3தி4ரேவ ச1 |

அஹங்கா1ர இதீ1யம் மே பி4ன்னா ப்1ரக்1ருதி1ரஷ்ட1தா4 ||4||

பூமிஹி----பூமி; ஆபஹ—---நீர்; அனலஹ--—நெருப்பு; வாயுஹு----காற்று; கம்--—வெளி; மனஹ—--மனம்; புத்திஹி------புத்தி; ஏவ—--நிச்சயமாக; ச—-மற்றும்; அஹங்காரஹ—--அஹங்காரம்; இதி—--இவ்வாறு; இயம்—--இவை அனைத்தும்; மே---நான் என்; பின்னா—--பிரிவுகள்; ப்ரகிருதிஹி----பொருள் ஆற்றல்; அஷ்டதா---எட்டு விதமான

అనువాదం

BG 7.4: பூமி, நீர், நெருப்பு, காற்று, விண்வெளி, மனம், புத்தி மற்றும் அகங்காரம் - இவை எனது பொருள் ஆற்றலின் எட்டு கூறுகள்.

వ్యాఖ్యానం

இந்த உலகத்தை உள்ளடக்கிய பொருள் ஆற்றல்--மாயா, அதிசயமாக சிக்கலானது மற்றும் அளவிலடங்காதது. அதை இன வாரியாக பிரித்து, வகைப்படுத்துவதன் மூலம், நமது எல்லைக்குட்பட்ட அறிவுக்கு சற்று புரியும்படி செய்கிறோம். இருப்பினும், இந்த வகைகளில் ஒவ்வொன்றும் மேலும் எண்ணற்ற துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. நவீன அறிவியலில் பயன்படுத்தப்படும் வகைப்பாடு அமைப்பு கூறுகளின் கலவையாகப் பொருளைப் பார்க்கிறது. தற்போது, ​​118 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ரஸாயன அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. பகவத்கீதையிலும், பொதுவாக வேத தத்துவத்திலும், முற்றிலும் வேறுபட்ட வகைப்பாடு பயன்படுத்தப்படுகிறது. பொருள் ப்ரகி1ரிதி1 அல்லது கடவுளின் ஆற்றலாகக் கருதப்படுகிறது, மேலும் இந்த ஆற்றலின் எட்டு பிரிவுகள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டின் நவீன அறிவியலின் போக்கின் வெளிச்சத்தில் இது எவ்வளவு அற்புதமான நுண்ணறிவு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

1905 ஆம் ஆண்டில், அவரது அந்நுஸ் மிரபிலிஸ் ஆவணங்களில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதன்முதலில் பொருண்மை-ஆற்றல் சமநிலையின் கருத்தை முன்வைத்தார். E=mc2 என்ற சமன்பாட்டின் மூலம் எண்ணியல் ரீதியாக தீர்மானிக்கக்கூடிய அளவிற்கு, ஆற்றலாக மாற்றப்படும் திறன் உள்ளது என்று அவர் கூறினார். இந்தப் புரிதல் பிரபஞ்சத்தின் நியூட்டனின் முந்தைய திடப்பொருள் கொண்டதாக இருந்த கருத்தை மாற்றியது . பின்னர் 1920 களில், நீல்ஸ் போர் மற்றும் பிற விஞ்ஞானிகள் குவையக் கோட்பாட்டை (குவாண்டம் கோட்பாடு) முன்மொழிந்தனர், இது பொருளின் இரட்டை துகள்-அலை இயல்பை அளவிடுகிறது. அப்போதிருந்து, விஞ்ஞானிகள் ஒரு ஒருங்கிணைந்த புலக் கோட்பாட்டைத் தேடி வருகின்றனர், இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் பொருட்களையும் ஒரே புலத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள அனுமதிக்கும்.

நவீன அறிவியலின் வளர்ச்சிக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கியது சரியான ஒருங்கிணைந்த களக் கோட்பாடு. அவர் கூறுகிறார், 'அர்ஜுனா, ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் எனது பொருள் ஆற்றலின் வெளிப்பாடு.' இது இந்த உலகில் எண்ணற்ற வடிவங்கள், படிவங்கள் மற்றும் உருபொருள்களாக விரிந்துள்ள ஒரே ஒரு பொருள் ஆற்றல். இது தைத்திரிய உபநிடதத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது

1ஸ்மத்3வா ஏத1ஸ்மாதா3த்1மன ஆகா1ஶஹ ஸம்பூ41ஹ ஆகா1ஶாத்3வாயுஹு

வாயோரக்3னிஹி அக்1நேராப1ஹ அத்3ப்4யஹ ப்1ரிதி2வீ ப்1ரிதி2வ்யா

ஓஷத4யஹ ஓஷ தீ4ப்4யோ ’ன்னம் அன்னாத்1பு1ருஷஹ ஸ வா ஏஷ பு1ருஷோ

’ன்னரஸமயஹ (2.1.2)

பொருள் ஆற்றலின் ஆதி வடிவம் ப்ரகி1ரிதி1. உலகைப் படைக்க விரும்பும் பொழுது, ​​அவர் அதைப் பார்க்கிறார், அதன் மூலம் அது கிளர்ந்தெழுந்து மஹானாக விரிவடைகிறது (விஞ்ஞானம் இன்னும் இந்த நுட்பமான ஆற்றலை அடையவில்லை என்பதால், ஆங்கிலத்தில் அதற்கு இணையான வார்த்தை எதுவும் இல்லை). மஹான் மேலும் விரிவடைந்து, அறிவியலுக்குத் தெரிந்த எந்தவொரு பொருளையும் விட நுட்பமான பொருளாக வெளிப்படும் அடுத்த பொருள் அஹங்கார். அஹங்காரத்தில் இருந்து, பஞ்ச தன்மாத்திரங்கள்-- ஐந்து உணர்வுகள்-சுவை, தொடுதல், வாசனை, பார்வை மற்றும் ஒலி ஆகியவை தோன்றுகின்றன. அவற்றிலிருந்து விண்வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து மொத்த கூறுகள் வருகின்றன

இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஆற்றலின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக ஐந்து மொத்த கூறுகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், மனம், புத்தி மற்றும் அகங்காரத்தையும் தனது ஆற்றலின் தனித்துவமான கூறுகளாக உள்ளடக்குகிறார். இவை அனைத்தும் அவரது ஜட சக்தியின் பகுதிகள், மாயா என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். இவைகளுக்கு அப்பாலான ஆன்மாவின் ஆற்றல் அல்லது கடவுளின் உயர்ந்த ஆற்றலை அடுத்த வசனம் விவரிக்கிறது,

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
7. ஞான விஞ்ஞான யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency