అధ్యాయం 9: ராஜா வித்யா யோகம்

அறிவியல்களின் ராஜா மூலம் யோகம்

ஏழாவது மற்றும் எட்டாவது அத்தியாயங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் பக்தியை யோகத்தை அடைவதற்கான எளிதான வழிமுறையாகவும், யோகத்தின் உயர்ந்த வடிவமாகவும் அறிவித்தார். ஒன்பதாவது அத்தியாயத்தில், பிரமிப்பு, பயபக்தி மற்றும் பக்தியைத் தூண்டும் அவரது உன்னத மகிமைகளைப் பற்றி பேசுகிறார். அர்ஜுனன் முன் தனது தனிப்பட்ட வடிவில் நின்று கொண்டிருந்தாலும், மனித ஆளுமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று தவறாகக் கருதக்கூடாது என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் தனது பொருள் ஆற்றலின் மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறார் மற்றும் எவ்வாறு படைப்பின் தொடக்கத்தில் எண்ணற்ற உயிர் வடிவங்களை உருவாக்கி, அவற்றை மீண்டும் கலைக்கும் நேரத்தில் உள்வாங்கி, பின்னர் படைப்பின் அடுத்த சுழற்சியில் அவற்றை மீண்டும் வெளிப்படுத்துகிறார் என்பதை விளக்குகிறார். எங்கும் வீசும் பலத்த காற்று வானத்தில் எப்பொழுதும் தங்கியிருப்பது போல, எல்லா உயிர்களும் அவரில் வாழ்கின்றன. ஆயினும் கூட, அவரது தெய்வீக யோகமாயா சக்தியால், அவர் நடுநிலையான பார்வையாளராக, எப்பொழுதும் இந்த நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இந்து சமயத்தின் பலதெய்வ கோயில்களின் வெளிப்படையான குழப்பத்தை வழிபாட்டின் ஒரே இலக்கு ஒரு கடவுள் என்று விளக்கி தீர்த்து வைக்கிறார். அவர் அனைத்து உயிரினங்களின் குறிக்கோள், ஆதரவு, அடைக்கலம் மற்றும் ஒரே உண்மையான நண்பர். வேதங்களின் சம்பிரதாயச் சடங்குகளில் நாட்டம் கொண்டவர்கள் தேவலோக உறைவிடங்களை அடைகிறார்கள், அவர்களுடைய புண்ணியத் தகுதிகள் குறைந்துவிட்டால், அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். ஆனால் ஒப்புயர்வற்ற பகவானிடம் பிரத்யேக பக்தியில் ஈடுபடுபவர்கள் அவருடைய இருப்பிடத்தை அடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு, தன்னை நோக்கி செலுத்தப்படும் கலப்படமற்ற பக்தியின் அதி உன்னதத்தை உயர்த்துகிறார். அத்தகைய பக்தியில், நாம் கடவுளின் விருப்பத்துடன் முழுமையான ஐக்கியத்தில் வாழ வேண்டும், நம்மிடம் உள்ள அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்து, அவருக்காக மட்டுமே அனைத்தையும் செய்ய வேண்டும். அத்தகைய தூய பக்தியின் மூலம், கர்மங்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, கடவுளுடனான ஆழ்ந்த உட்பொருளுடைய ஐக்கியத்தின் இலக்கை அடைவார்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் யாரையும் ஆதரிப்பதும் இல்லை, நிராகரிப்பதும் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார் - அவர் அனைவருக்கும் பாரபட்சமற்றவர். அவரிடம் அடைக்கலம் அடையும் இழிவான பாவிகளையும் அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டு, அவர்களை விரைவில் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் தூய்மையாகவும் ஆக்குகிறார். தம்முடைய பக்தர்கள் அழியமாட்டார்கள் என்று வாக்குக் கொடுக்கிறார். அவர்களுக்குள் அமர்ந்து, அவர்களுக்கு இல்லாததை வழங்குகிறார், அவர்கள் ஏற்கனவே வைத்திருப்பதைப் பாதுகாக்கிறார். எனவே, நாம் எப்பொழுதும் அவரை நினைத்து, அவரை வணங்கி, நம் மனதையும் உடலையும் அவருக்கு அர்ப்பணித்து, அவரையே நமது உயர்ந்த இலக்காகக் கொள்ள வேண்டும்.

 

భగవద్గీత 9.1 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பகவான் கூறினார்: ஓ அர்ஜுனா, நீ என் மீது பொறாமை கொள்ளாததால், இந்த மிக ரகசியமான அறிவையும் ஞானத்தையும் நான் இப்பொழுது உனக்கு வழங்குகிறேன், இதை அறிந்தவுடன் நீ பொருள் இருப்பின் துயரங்களிலிருந்து விடுவிக்கப்படுவாய்.

భగవద్గీత 9.2 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இந்த அறிவு அறிவியலின் ராஜா மற்றும் அனைத்து ரகசியங்களிலும் மிகவும் ஆழமானது. அதைக் கேட்பவர்களைத் தூய்மைப்படுத்துகிறது. இது நேரடியாக உணரக்கூடிய, அறியக்கூடிய தர்மத்திற்கு இணங்கிய, நடைமுறைப்படுத்த எளிதான, மற்றும் நிரந்தரமானது.

భగవద్గీత 9.3 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இந்த தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் எதிரிகளை வென்றவனாகிய என்னை அடைய முடியாது. ஓ எதிரிகளை வெல்லும் அர்ஜுனா, அவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியில் மீண்டும் மீண்டும் இந்த உலகத்திற்கு திரும்பி வருகிறார்கள்.

భగవద్గీత 9.4 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இந்த முழு பிரபஞ்ச வெளிப்பாடும் எனது வெளிப்படுத்தப்படாத வடிவத்தில் என்னால் வியாபித்துள்ளது. எல்லா உயிர்களும் என்னில் வசிக்கின்றன, ஆனால் நான் அவற்றில் வசிப்பதில்லை.

భగవద్గీత 9.5 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இருப்பினும், உயிர்கள் என்னில் உறைவதில்லை. என் தெய்வீக ஆற்றலின் மர்மத்தைப் பார்! எல்லா உயிர்களையும் நான் படைத்தவனாகவும், பராமரிப்பவனாகவும் இருந்தாலும், நான் அவற்றால் அல்லது ஜட இயற்கையால் பாதிக்கப்படவில்லை.

భగవద్గీత 9.6 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எங்கும் வீசும் பலத்த காற்று வானத்தில் எப்பொழுதும் தங்கியிருப்பது போல, எல்லா உயிர்களும் எப்பொழுதும் என்னிடத்தில் தங்கியிருக்கின்றன என்பதை அறிந்து கொள்.

భగవద్గీత 9.7 - 9.8 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒரு கல்பத்தின் முடிவில், அனைத்து உயிரினங்களும் எனது ஆதிப்பொருள் ஆற்றலில் இணைகின்றன. குந்தியின் மகனே, அடுத்த படைப்பின் தொடக்கத்தில், நான் அவற்றை மீண்டும் வெளிப்படுத்துகிறேன். எனது பொருள் ஆற்றலைத் தலைமை தாங்கி, இந்த எண்ணற்ற வடிவங்களை அவற்றின் இயல்புகளின் சக்திக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் உருவாக்குகிறேன்.

భగవద్గీత 9.9 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

செல்வத்தை வென்றவரே, இந்த செயல்கள் எதுவும் என்னை பிணைப்பதில்லை. நான் இந்தச் செயல்களில் இருந்து விலகி, நடுநிலையான பார்வையாளனாகவே இருக்கிறேன்.

భగవద్గీత 9.10 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

குந்தியின் மகனே, எனது வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதால், இந்த பொருள் ஆற்றல் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற வடிவங்களை உருவாக்குகிறது. இந்த காரணத்திற்காக, பொருள் உலகம் மாற்றங்களுக்கு உட்படுகிறது (உருவாக்கம், பராமரிப்பு மற்றும் கலைத்தல்).

భగవద్గీత 9.11 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் எனது தனிப்பட்ட வடிவத்தில் அவதரிக்கும் பொழுது மந்தமான புத்தியடைய அலட்சியப்படுத்துபவர்களால் என்னை அடையாளம் காண முடியாது. எல்லா உயிர்களுக்கும் மேலான இறைவனாகிய எனது ஆளுமையின் தெய்வீகத்தன்மையை அவர்கள் அறியவில்லை.

భగవద్గీత 9.12 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பொருள் ஆற்றலால் மாயைக்குட்பட்டவர்கள் திகைத்து, பேய் மற்றும் நாத்திக கருத்துக்களை கடைப்பிடிக்கிறார்கள். அந்த ஏமாற்றப்பட்ட நிலையில், அவர்களின் நலனுக்கான நம்பிக்கைகள் வீணாகின்றன, அவர்களின் பலனளிக்கும் செயல்கள் வீணாகின்றன, மேலும் அவர்களின் அறிவு கலாச்சாரம் குழப்பமடைகிறது.

భగవద్గీత 9.13 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆனால், என் தெய்வீக ஆற்றலில் அடைக்கலம் எடுக்கும் உயர்ந்த ஆன்மாக்கள், ஓ பார்த, என்னை,அனைத்துப் படைப்புகளின் பிறப்பிடமான கிருஷ்ணபகவான் ஆக அறிந்திருக்கிறார்கள் . அவர்கள் தங்கள் மனதை என்னிடமே நிலைநிருத்தி என் பக்தியில் ஈடுபடுகிறார்கள்.

భగవద్గీత 9.14 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எப்பொழுதும் என் தெய்வீக மகிமைகளைப் பாடி, மிகுந்த உறுதியுடன் பாடுபட்டு, பணிவுடன் என் முன் பணிந்து, அவர்கள் என்னை அன்பான பக்தியுடன் தொடர்ந்து வணங்குகிறார்கள்.

భగవద్గీత 9.15 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

மற்றவர்கள், அறிவை வளர்க்கும் யாகத்தில் ஈடுபட்டு, பல வழிகளில் என்னை வழிபடுகிறார்கள். சிலர் என்னை வேறுபடுத்தப்படாத ஒருமையாக அவர்களிடமிருந்து வேறுபடாததாகப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் என்னை அவர்களிடமிருந்து தனியாகப் பார்க்கிறார்கள். மற்றும் பலர் என் பிரபஞ்ச வடிவத்தின் எல்லையற்ற வெளிப்பாடுகளில் என்னை வணங்குகிறார்கள்.

భగవద్గీత 9.16 - 9.17 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நானே வேத சடங்குகள், நானே பலி, நானே முன்னோர்களுக்குப் படைக்கப்பட்ட ப்ரஸாதம். நான் மருத்துவ மூலிகை, நான் வேதமந்திரம். நான் நெய் ஆக மாற்றப்பட்ட வெண்ணை; நான் நெருப்பு (அக்னி) மற்றும் அர்ப்பணிக்கப்படும் செயல். இந்த பிரபஞ்சத்தின், நான் தந்தை; நான் தாயும் கூட, பேணும், பேரருளும் கூட. நான் புனிதப்படுத்தபடுத்துபவன், அறிவின் குறிக்கோள், ஓம் என்ற புனிதமான எழுத்து. நான் ரிக்வேதம், ஸாமவேதம், மற்றும் யஜுர் வேதம்.

భగవద్గీత 9.18 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் அனைத்து உயிரினங்களின் உச்ச இலக்கு, மேலும் நான் அவற்றின் பராமரிப்பாளர், எஜமானர், சான்று, உறைவிடம், மற்றும் நண்பர். நான் படைப்பின் தோற்றம், முடிவு மற்றும் இளைப்பாறும் இடம்; நான் களஞ்சியம் மற்றும் நித்திய விதை.

భగవద్గీత 9.19 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் சூரியனைப் போல வெப்பத்தை வெளிப்படுத்துகிறேன், நான் மழையை தடுத்து மற்றும் வழங்குகிறேன். நான் அழியாமை மற்றும் மரணத்தின் உருவகமாக இருப்பவன். ஓ அர்ஜுனா நான் மாய உரு மற்றும் பொருள்

భగవద్గీత 9.20 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள பலன் தரும் வேதசடங்குகளில் விருப்பம் உள்ளவர்கள் சடங்குகள், யாகங்கள் மூலம் என்னை வணங்குகிறார்கள். யாகங்களில் எஞ்சியிருக்கும் ஸோம ரஸத்தைக் குடித்து, பாவத்திலிருந்து தூய்மையடைந்து, சொர்க்கம் செல்ல முற்படுகிறார்கள். தங்கள் புண்ணிய செயல்களால், சொர்க்கத்தின் அரசனான இந்திரனின் இருப்பிடத்திற்குச் சென்று, தேவலோகத் தேவர்களின் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

భగవద్గీత 9.21 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அவர்கள் தேவலோக இன்பங்களை அனுபவித்து, அவர்களின் தகுதிகள் தீர்ந்து, பூமிக்கு திரும்புகிறார்கள். இவ்வாறு, வேத சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள், இன்பப் பொருட்களை விரும்பி, மீண்டும் மீண்டும் இவ்வுலகிற்கு வந்து செல்கின்றனர்.

భగవద్గీత 9.22 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எப்பொழுதும் மனதை என்னிடம் நிலைநிருத்தி, என்னிடம் பிரத்யேக பக்தியில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். எவருடைய மனம் எப்பொழுதும் என்னில் லயிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு, அவர்களிடம் இல்லாததைக் கொடுத்து, ஏற்கனவே அவர்கள் உடைமையாக பெற்றிருப்பதை பாதுகாக்கிறேன்.

భగవద్గీత 9.23 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

குந்தியின் மகனே, மற்ற தெய்வங்களை உண்மையாக வணங்கும் பக்தர்களும் என்னையும் வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு தவறான முறையில் செய்கிறார்கள்.

భగవద్గీత 9.24 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் அனைத்து தியாகங்களையும் அனுபவிப்பவன் மற்றும் நானே அனைத்து தியாகங்களுக்கும் உரிய இறைவன். ஆனால் என் தெய்வீக இயல்பை உணரத் தவறியவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும்.

భగవద్గీత 9.25 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

தேவலோக தெய்வங்களை வழிபடுபவர்கள் தேவலோக தெய்வங்களுக்கு இடையே பிறக்கிறார்கள், மூதாதையர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடம் செல்கிறார்கள், பேய்களை வணங்குபவர்கள் அத்தகைய உயிரினங்களில் பிறக்கிறார்கள், என்னுடைய பக்தர்கள் என்னிடம் மட்டுமே வருகிறார்கள்

భగవద్గీత 9.26 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என் பக்தன் பக்தியுடன் தூய்மையான உணர்வால் சமர்பிக்கும் ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், அல்லது தண்ணீர் கூட நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.

భగవద్గీత 9.27 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

குந்தியின் மகனே, நீ எதைச் செய்தாலும், எதைச் சப்பிட்டாலும், புனிதமான நெருப்புக்குப் எதைக்காணிக்கையாக் கொடுத்தாலும் , எதைப் பரிசாகக் கொடுத்தாலும், என்ன துறவறம் செய்கிறாயோ, அவற்றை எனக்கு காணிக்கையாகச் செய்.

భగవద్గీత 9.28 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உன்னுடைய எல்லா வேலைகளையும் எனக்கு அர்ப்பணிப்பதன் மூலம், நல்ல மற்றும் கெட்ட விளைவுகளின் அடிமைத்தனத்திலிருந்து நீ விடுபடுவாய். துறப்பதன் மூலம் உனது மனம் என்னுடன் இணைந்திருந்தால், நீ விடுதலை பெற்று என்னை அடைவாய்.

భగవద్గీత 9.29 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் எல்லா உயிர்களையும் சமமாகவே பாவிக்கிறேன்; நான் நான் யாரிடமும் பாரபட்சம் மற்றும் விரோதம் பாராட்டுவதில்லை. ஆனால் அன்புடன் என்னை வணங்கும் பக்தர்கள் என்னில் வசிக்கிறார்கள், நான் அவர்களில் வசிக்கிறேன்.

భగవద్గీత 9.30 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

கொடிய பாவிகள் என்னைப் பிரத்தியேக பக்தியுடன் வணங்கினாலும், அவர்கள் சரியான தீர்மானத்தைச் செய்ததால் அவர்கள் நீதிமான்களாகக் கருதப்படுவார்கள்.

భగవద్గీత 9.31 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

விரைவில் அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக மாறி நிலையான அமைதியை அடைகிறார்கள். குந்தியின் மகனே, என்னுடைய எந்த ஒரு பக்தனும் ஒருபொழுதும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிக்கவும்.

భగవద్గీత 9.32 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என்னிடத்தில் அடைக்கலம் புகுபவர்கள் அனைவரும், அவர்களின் பிறப்பு, இனம், பாலினம் அல்லது ஜாதி எதுவாக இருந்தாலும், சமூகம் இகழ்ந்தாலும் கூட, உயர்ந்த நிலையை அடைவார்கள்.

భగవద్గీత 9.33 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அப்படியானால், அரசர்கள் மற்றும் முனிவர்களைப் பற்றி என்ன பேசுவது? எனவே, இந்த நிலையற்ற மற்றும் மகிழ்ச்சியற்ற உலகத்திற்கு வந்து, என்னிடம் பக்தியுடன் ஈடுபடு.

భగవద్గీత 9.34 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எப்பொழுதும் என்னையே நினைத்து, என்னிடம் பக்தி செலுத்தி, என்னை வணங்கி, என்னை தலை வணங்கு. என்னிடம் அர்ப்பணம் செய்யப்பட்ட மனதுடனும் உடலுடனும் நீ என்னிடமே வருவாய்.
Swami Mukundananda
9. ராஜா வித்யா யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency